மகிழ்ச்சியான வாழ்க்கை
Magizhchchiyaana Vaazhkkai
₹65+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சென்னிமலை தண்டபாணி
பதிப்பகம் :விஜயா பதிப்பகம்
Publisher :Vijaya Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :144
பதிப்பு :1
Published on :2013
ISBN :9788184465136
Add to Cartஒவ்வொரு நொடியும் மனிதன் மகிழ்ச்சியை எதிர்பார்க்கிறான்.
வாழ்க்கையில் மகிழ்ச்சி கிடைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பிலேயே காலத்தைக்
கடத்துகிறான். ஆனால் மகிழ்ச்சியான வாழ்க்கையை எப்படி வடிவமைத்துக் கொள்வது
என்பது ஒரு கலை.அந்தக் கலையின் நுட்பங்களை அறிந்தவர்கள் மகிழ்ச்சியை
வாழ்வில் நிரப்பிக் கொள்கிறார்கள். அப்படிப்பட்ட நுட்பங்களில் சிலவற்றை
இந்நூல் வெளிச்சப்படுத்தியிருக்கிறது.இந்நூல் உருவாக்கத்தில் குருதேவர்
சிவானந்தர், சுவாமி விவேகானந்தர், தாதா வாஸ்வானி, ஆசார்ய மகாபிரக்ய போன்ற
சான்றோர்களின் எழுத்துக்கள் பெரிதும் பயன்பட்டன. பல மாமனிதர்களின் வாழ்வில்
நடைபெற்ற நிகழ்ச்சிகளும் பயனுள்ளவையாக இருந்தன. வாழ்க்கையை அழகாக்கும்
வழிகள் வாசகர்களுக்கு இந்நூலில் கிட்டும்.இந்நூலில் அங்கங்கே பதியனிட்டு
வைத்திருக்கும் சான்றோர்களின் சிந்தனைகளின் ஆழத்தை அப்பெருமக்களின்
வாழ்க்கையையும், படைப்புக்களையும் மேலும் மேலும் வாசகர்கள் படிப்பதால் அறிய
முடியும்.மனம் விரிவடைய அதுதான் வழி. மகிழ்ச்சியான வாழ்க்கைக்கும் அதுவே
ஒளி.