book

தமிழின் முதல் நாவல் ஆதியூர் அவதானி சரிதம்

Aadhiyoor Avadhaani Saridham

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வித்துவான் சேஷையங்கார்
பதிப்பகம் :விஜயா பதிப்பகம்
Publisher :Vijaya Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :160
பதிப்பு :1
Published on :2012
ISBN :9788184463040
Add to Cart

மாயூரம் வேதநாயகம் பிள்ளை உரைநடையில் எழுதிய பிரதாப முதலியார் சரித்திரம் என்ற நாவல்தான் தமிழில் வெளிவந்த முதல் நாவல் என்று மதிப்பிட்டு வந்திருக்கிறோம். அது வெளிவந்தது 1879ஆம் ஆண்டு. இதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பே, 1875இல் ஆதியூர் அவதானி சரிதம் வெளிவந்துவிட்டது. இது அம்மானைப் பாடல் வடிவில் இருந்தபோதிலும், ஆசிரியர் சேஷையங்கார் உறுதியளிப்பது போல் இதிலடங்கிய சங்கதிகள் பல இந்துக் குடும்பங்களில் இக்காலத்திலுள்ளவைகள்தாம். ஆதலால் இது பொய்ப் பெயர் பூண்டு மெய்ப்பொருள் காட்டும் நாவல் வடிவமாக எற்றுக்கொள்ளப்பட்டு, தமிழில் வெளிவந்த முதல் நாவல் என்ற தகுதியைப் பெறுகிறது.