-
காலத்தையே புரட்டிப்போடும் வரலாற்று உண்மைகளை காலப்பதிவேட்டில் பதியவைக்கும் கருத்துப் பொலிவுமிக்க வீர நிகழ்வுகள் ஏராளம். வேகத்துடன்கூடிய விவேகத்தைப் பறைசாற்றும் சரித்திர வீரர்களின் வாழ்க்கை நிகழ்வுகளை வார்த்தைகளுக்குள் அடக்கிவிட முடியாது என்பதற்கு, மாவீரன் மாலிக்காபூரின் வரலாறு சிறந்த எடுத்துக்காட்டு. டில்லியை ஆண்ட அலாவுதீன் கில்ஜியின் ஓர் அடிமை அரசன்தான் மாலிக்காபூர். சமூகக் குற்றவாளியாக, கொடூரனாக, மத நல்லிணக்கத்தை மிதித்தவனாக மாலிக்காபூரை பலரும் சொல்வது உண்டு. தென்னகப் படையெடுப்பு நிகழ்ச்சிகளை வர்ணிக்கும் சரித்திர ஆசிரியர்கள் சிலர், அவரைக் கொள்ளைக்காரனைப்போல் சித்திரித்தும், தென்னாட்டையே துவம்சம் செய்துவிட்டதுபோலவும் சொல்கிறார்கள். 1296 முதல் 1316 வரை வாழ்ந்து வரலாறு படைத்த மாலிக்காபூரின் ஆட்சித் திறனையும், போர் புரியும் வேகத்தையும், பல்வேறு விதமான அரசியல் சூழ்ச்சிகளில் இருந்து வெளிவந்த நிகழ்வுகளையும் இந்த நூலில் ஆணித்தரமாகத் தொகுத்துள்ளார் நூலாசிரியர் திவான். மேலும், சமூகப் பிரிவுகள், மத நல்லிணக்கக் கோட்பாடு, இறையாண்மை தொடர்பான நடவடிக்கைகளையும் விமர்சித்து வெளியான பல்வேறு நூல்களின் முரண்பாடான பதிவுகளையும் சுவாரஸ்யமாகத் தொகுத்துள்ளார் நூலாசிரியர் திவான். வரலாற்று நிஜங்களை முற்றிலுமாக படித்து உணர வேண்டிய கடமை நம் ஒவ்வொருவருக்கும் உள்ளது என்பதை அழகாகக் கூறும் அற்புத நூல்களில் இதுவும் ஒன்று.
-
This book Malikapur Oru Maveeranin Marupakkam is written by S.Dewan and published by Vikatan Prasuram.
இந்த நூல் மாலிக்காபூர் ஒரு மாவீரனின் மறுபக்கம், செ. திவான் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Malikapur Oru Maveeranin Marupakkam, மாலிக்காபூர் ஒரு மாவீரனின் மறுபக்கம், செ. திவான், S.Dewan, Varalaru, வரலாறு , S.Dewan Varalaru,செ. திவான் வரலாறு,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy S.Dewan books, buy Vikatan Prasuram books online, buy Malikapur Oru Maveeranin Marupakkam tamil book.
|