book

செந்தூரச்சாரல்

Senthoorasaral

₹110+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சி.ஆர். ரவீந்திரன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :240
பதிப்பு :1
Published on :2009
ISBN :9788123415591
குறிச்சொற்கள் :சிந்தனைக்கதைகள், பழங்கதைகள், புராணக் கதைகள், வரலாற்றுக் கதைகள்
Add to Cart

வாழ்க்கை ஓர் உன்னதம். அதை உணர்பவர்களுக்கு  அது  எங்கேயும்  எப்போதும்  இருந்துகொண்டே  இருப்பது. அதனுடைய இருப்புநிலை அதன் இயக்கநிலையிலேயே புலனாகும். ஒரு  தனிமனிதன்   தன்னிலிருந்தே  இந்த  வாழ்க்கையை  மதிப்பீடு செய்கிறான். ஒரு தனி மனிதன் அவன் அவன் சார்ந்துள்ள வாழ்க்கைச்சூழலில்  அவன்  இயங்கும்போது   அவன் தன்னை நிலைப்படுத்திக் கொள்ளப் போராட வேண்டியிருக்கிறது. அந்தப் போராட்டத்தில் அவன் தனக்கானவைகளை தன் வசப்படுத்திக்
கொள்ள விரும்புகிறான். தன்னிடம்  இல்லாத்தைப் பெற  இவன்  தன்னிடம் இருப்பதைக் கொடுத்துப்பெற வேண்டியுள்ளது. இதுவே, அவனைப் போராடுவதற்கு உந்துகிறது. சமூக மனிதனாகவும் இருந்து வாழ்க்கையை  எதிர்கொள்ளச் செய்கிறது. வாழ்க்கையும் இயற்கையும்  இல்லாமல் அவனால் இயங்க முடியாது. அவன் உள்ளும் புறமும்  இயங்குகிறான்.மனிதர்கள்
வருவார்கள்! போவார்கள் வாழ்க்கை மட்டும் இருந்துகொண்டே இருக்கும். அதன் இயக்கத்தில் வரலாறு தொடர்ந்துகொண்டே இருக்கும். சமுதாய வாழ்க்கைத் தளத்தில் அவரவர் தன்னை நிலைப்படுத்திக் கொள்ள முயலும் இயக்கம் தான் அவ்வப்போது அர்த்தம் நிறைந்த கணங்களைப் பிறக்கச் செய்கின்றது.

                                                                                                                                        -  சி.ஆர்.ரவீந்திரன்.