book

வேளாண்மை தொழில்நுட்பக்கையேடு

Velaanmai Tholinutpakaiyedu

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கி. சீனிவாசன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :விவசாயம்
பக்கங்கள் :164
பதிப்பு :2
Published on :2006
ISBN :9788123407302
குறிச்சொற்கள் :உழவுத் தொழில், வேளாண்மை, காடுகள், பாசன வசதி, கடன் வசதி, நவீன் தொழில்நுட்பம், சொட்டு நீர்ப்ாசனம்
Out of Stock
Add to Alert List

வேளாண்மை தொழில்நுட்பக்கையேடு ;வானம் பொழிந்தால் பூமி விளைந்து விடாது. நம் நாட்டில் பெய்யும் மழைநீர்
கடலில் கலந்து வீணாவதுதான்  அதிகம். நாளுக்கு நாள் நம் நாட்டில் மக்கள் தொகை பெருகி வருகிறது.குடும்பக்
கட்டுப்பாட்டுப் பிரச்சாரம் பெருகினாலும் மக்கள் தொகைப் பெருக்கத்திற்குக்  குறைவில்லை. மக்கள் தொகை பெருகப்
பெருக விளை நிலங்கள்  பெருக வேண்டும். விவசாயிகள் பெருகவேண்டும். வேளாண்மைத் தொழில் நுட்பம் பெருக
வேண்டும். தொழில் நுட்பங்களைக் கடைப்பிடித்து விளைச்சலைப்  பெருக்க வேண்டும். நாடு வறுமையின்றி வளம்
கண்டு தன்னிறைவு பெற வேண்டுமானால் விவசாய அபிவிருத்தித் திட்டங்கள் மும்முரமாகச் செயல்படுத்த வேண்டும்.
நெற்பயிர், தென்னை, நிலக்கடலை, பருத்தி, கரும்பு, முந்திரி, பப்பாளி, காளான் ஆகியவற்றை வேளாண்மை செய்து
பயன்பெரும் தொழில் நுட்பங்களை இந்நூல் விளக்குகிறது. நீர் நிர்வாகம் செய்யும் முறை சிக்கனமான சொட்டு
நீர்ப்ாசனம், களர்நிலங்களைச் சீர்திருத்தம் செய்யும் முறை ஆகியவை பற்றி இந்நூல் தெளிவுபடுத்துகிறது. இரசாயன
உரங்களின் முக்கியத்துவம் அதன் பயன்பாடுகள்  எடுத்துக்கூறப்பட்டுள்ளது.

                                                                                                                                                 _ பதிப்பகத்தார்.