book

பாண்டியர் வரலாறு

Pandiar Varalaru

₹180+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சதாசிவப் பண்டாரத்தார்
பதிப்பகம் :ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
Publisher :Shri Senbaga Pathippagam
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :192
பதிப்பு :1
Published on :2011
Add to Cart

இந்திய தீபகற்பத்தின் தென் பகுதியில் அமையப்பெற்ற தமிழ்நாட்டை ஆண்ட மூவேந்தர்களுள் ஒருவர் பாண்டியர்கள். மதுரையை தலைநகராகக் கொண்டு ஆண்ட பாண்டிய மன்னர்கள் தமிழுக்கு அரும்தொண்டு ஆற்றியுள்ளனர். இயல், இசை மற்றும் நாடகம் என்னும் முத்தமிழுக்கு சங்கம் அமைத்து வளர்த்துள்ளனர். தலைச்சங்கம், இடைச்சங்கம் மற்றும் கடைச்சங்கம் என மூன்று தமிழ்சங்கங்களை பாண்டிய மன்னர்கள் அமைத்துள்ளனர். இவற்றில் கடைச்சங்கம் தவிர மற்ற இரு சங்கங்கள் கடலில் மூழ்கிய குமரிக்கண்டம், குமரி நாடு அல்லது இலெமூரியா என்றழைக்கப்படும் நிலப்பகுதியில் இருந்ததாக தமிழ் அறிஞர்களால் நம்பப்படுகிறது. . இந்தக்கடற்கோளால் கடலில் முழ்கி விட்டதாகக் கருதப்படுகிறது. பாண்டிய மன்னர்கள் மதுரை, இராமநாதபுரம்,திருநெல்வேலி மற்றும் தற்போதைய கேரளத்தின் தென்பகுதி ஆகியவற்றை ஆட்சி செய்தனர். இந்தியாவில் எந்த ஒரு மன்னர் குலத்துக்கும் இல்லாத மிக நீண்ட நெடிய வரலாறு பாண்டிய மன்னர் பரம்பரைக்கு உண்டு.