book

நீருக்கடியில் சில குரல்கள்

Neerikadiyil Sila Kuralgal

₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பிரபு காளிதாஸ்
பதிப்பகம் :உயிர்மை பதிப்பகம்
Publisher :Uyirmmai Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :
பதிப்பு :1
Published on :2017
குறிச்சொற்கள் :Chennai Book Fair 2017
Out of Stock
Add to Alert List

நாம் நம்பவிரும்புகிற கட்டமைக்கிற சட்டகங்களுக்குள் நிகழ்வதல்ல நம் வாழ்க்கை. ஒழுங்குகளுக்கு வெளியே இடையறாது நிகழும் மீறல்களும் பிறழ்வுகளும்தான் நம் இருப்பின் ரகசிய நீரோட்டங்களாக இருக்கின்றன. அன்பு, காதல், காமம், வன்முறை, துரோகம் என நம்மீது கவியும் அத்தனை உணர்ச்சிகளும் தமக்கான சொந்த நியதிகளையும் நியாயங்களையும் உருவாக்கிக்கொள்கின்றன. அவை சமூகத்தின் ஒப்புக்கொள்ளப்பட்ட நியாயங்களுக்குப் புறம்பானவையாக இருக்கலாம். ஆனால் அந்த இச்சைகள்தான் மனிதர்களை அவர்களது இருளடந்த மனவெளிகளில் தொடர்ந்து செலுத்திக்கொண்டிருக்கின்றன. பிரபு காளிதாஸின் இந்த நாவலில் வரும் பாத்திரங்கள் நீருக்கடியில் கேட்கும் ரகசியக் குரல்களாக இருக்கலாம். ஆனால் அவைதான் நம் அந்தரங்க நினைவுகளின் குரல்கள். அந்தக் குரல்கள் நம்மை சங்கடப்படுத்துவதற்குக் காரணம், அவை நம் குரலின் சாயலில் இருப்பதுதான்.