book

வரலாற்றில் முதலாளியமும் மதமும்

Varalaatril Muthalaliyamum Mathamum

₹25+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பிரெடெரிக் எங்கெல்ஸ்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கம்யூனிசம்
பக்கங்கள் :40
பதிப்பு :1
Published on :2014
ISBN :9788123427553
Out of Stock
Add to Alert List

மார்க்ஸ் வரலாறை எங்கெல்ஸ் இல்லாமல் எழுத முடியாது. எங்கெல்ஸ் வரலாறை மார்க்ஸ் இல்லாமல் எழுத முடியாது. அத்தகைய தோழமை வாழ்வை வாழ்ந்தனர் மார்க்ஸ் - எங்கெல்ஸ் இருவரும். மனிதகுல விடுதலைக்காகத் தங்கள் வாழ்வை அர்ப்பணித்துக் கொண்ட காரல்மார்க்ஸ் பிரடெரிக் எங்கெல்ஸ் இருவருமே என்றென்றும் மனிதகுல வரலாற்றில் நிலைத்திருப்பர்.

இங்கிலாந்து ஏழை பாட்டாளி வர்க்கத்தின் அவலம் பற்றி எங்கெல்ஸ் எழுதிய நூலான’ "இங்கிலாந்து உழைக்கும் வர்க்க மக்களின் நிலைமை" : 19 ம் நூற்றாண்டில், இங்கிலாந்தின் நகரங்களில் இருந்த சேரிகளில் வாழ்ந்த ஏழை மக்களின் அவல வாழ்க்கை பற்றிப் படம் பிடித்துக் காட்டுகிறது. இதை விட சிறப்பாக வேறெந்த நூலிலும் அக்காலத்திய இங்கிலாந்து நாட்டின் தொழிலாளி வர்க்கத்தைப் பற்றிய கருத்துக்கள் இடம் பெறவில்லை.

பிரடெரிக் எங்கெல்ஸ் காரல் மார்க்சுக்காகவே வாழ்ந்து அவரது நூல்களை மனிதகுலத்திற்கு வழங்கி மகத்தான பணியை முடித்து 1895ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5 ஆம் நாள் மறைந்தார்.