book

சிறுவருக்கான கம்பராமாயணக் கதைகள்

Siruvarukaana Kambaramayana Kathaigal

₹28+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :செவல்குளம் ஆச்சா
பதிப்பகம் :நிஜம்
Publisher :Nizham
புத்தக வகை :சிறுவர்களுக்காக
பக்கங்கள் :112
பதிப்பு :1
Published on :2003
Out of Stock
Add to Alert List

தமிழ் இலக்கியத்தில் மிகச் சிறப்பாகப் போற்றப்படும் காப்பிய நூல்களுள் ஒன்று இராமாயணம். இந்நூலின் ஆசிரியர் கம்பர். சமயக் காப்பியங்களுள் இது வைணவ சமயத்தைச் சார்ந்தது. இந்தக் காப்பியம் தோன்றிய காலம் இரண்டாம் குலோத்துங்க சோழன் ஆண்ட, கி.பி. 12-ஆம் நூற்றாண்டாகும். சிலர் ஒன்பதாம் நூற்றாண்டு என்றும் கூறுவர். சோழ நாட்டில் திருவழுந்தூரில் உவச்சர் மரபில் தோன்றிய கம்பரை ஆதரித்தவர் திருவெண்ணெய் நல்லூரில் வாழ்ந்த சடையப்ப வள்ளல் ஆவார். வான்மீகி முனிவர் வடமொழியில் இராமாயணத்தை இயற்றினார். அதனை, தமிழ்ப் பண்பாட்டிற்கு ஏற்ப ஈடும் இணையும் இல்லாமல் கம்பர் தமிழில் தந்த காவியமே இராமாயணமாகும். கம்பர், தம் நூலுக்கு இராமாவதாரம் என்று பெயரிட்டார்.