book

தமிழ்நாட்டில் நிலமும் சாதியும்

Tamil Naatil Nilamum Saathiyum

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :M. தங்கராஜ்
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :72
பதிப்பு :1
Published on :2009
ISBN :9788177358278
Add to Cart

உலகமயம் ஊக்குவிக்கப்பட்டு தகவல்தொழில்நுட்பமும் சாஃப்ட்வேர் உற்பத்தியும் லாபம் ஈட்டும் முக்கிய வழிகளாகிவிட்ட இன்றைய சூழலில் விவசாயம் என்பதே அழிந்துகொண்டிருக்கும் நிலையில் நிலம் வேண்டும் எனக் கேட்டுக்கொண்டிருப்பது சரியானதுதானா? என்று கேள்வி எழலாம்.

கடந்த இருபது ஆண்டுகளில் தமிழகத்தில் விவசாயம் மற்றும் உற்பத்தித்துறைகள் பலவீனமடைந்துவிட்டன. சேவைத்துறைகளில் மட்டும்தான் வேலைவாய்ப்பு கொஞ்சம் மிச்சமிருந்தது. தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியாவின் முன்னணி மாநிலங்கள் எனச் சொல்லப்படுபவற்றின் நிலையும் அதுதான். தனியார்மயம் ஊக்குவிக்கப்பட்டு சேவைத்துறைகளும்கூட தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டன . அரசு ஊழியர்களைக் குறைப்பது, புதிய நியமனங்களைக் காலவரையின்றி நிறுத்திவிடுவது என்ற தந்திரங்களை மத்திய மாநில அரசுகள் பின்பற்றிவருகின்றன.

இடஒதுக்கீடு உள்ள அரசுத் துறைகளிலும் அது சரியாக நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. தனியார் துறைகளிலோ தலித்துகள் நுழைவதென்பது எளிதான விஷயமில்லை. ஆக, தலித்துகளுக்கான வேலைவாய்ப்புகளின் கதவுகள் ஒரேயடியாக இழுத்து மூடப்பட்டாயிற்று.

படித்தவர்களுக்கு வேலை இல்லை, படிப்பதும் இனி பணமிருந்தால்தான் சாத்தியம் என்று ஆகிவிட்டநிலையில் தலித்துகளின் இடப்பெயர்ச்சி முழுவதுமாகத் தடைபட்டுவிட்டது. உதிரிப் பாட்டாளிகளாக நகரங்களுக்கு வந்தவர்களும்கூட மீண்டும் கிராமங்களை நோக்கியே விரட்டப்படுகின்றனர். அவர்கள் உயிர்பிழைக்க இப்போது இருக்கும் ஒரே வழி , மண்ணுரிமை மீட்பு மட்டும்தான். பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் தலித்துகளுக்கு வழங்கப்பட்டு இப்போது மற்றவர்களின் ஆக்கிரமிப்பில் இருக்கும் பஞ்சமி நிலங்களை மீட்பதற்கான போராட்டம் அதன் துவக்கமாக அமையலாம்.