கடவுள் அலையும் நகரம்
Kadavul Alayum Nagaram
₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கே.பாலமுருகன்
பதிப்பகம் :தங்கமீன் பதிப்பகம்
Publisher :Thangameen Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :104
பதிப்பு :1
Published on :2009
Out of StockAdd to Alert List
நம்முள் சில விசித்திரமான நகரச் சித்திரங்களை துணிச்சலோடு வரைந்துவிட்டுப் போகும் தூரிகையோடு நிற்கிறார் கே.பாலமுருகன். நிறைந்திருத்தலும், வெற்றாவதுமென மாறும் பரப்பொன்று அவருள் அதிர்வை உண்டாக்குகிறது. அந்த அதிர்வு படிமங்களாக நினைவுகளின் தாழ்வறையில் தங்கியும் விடுகிறது. தான் உணர்ந்த அதே அதிர்வை நம்முள் நகர்த்த முனையும் எத்தனிப்புகளாக வடிவம் பெறுகின்றன கவிதைகள்.கடவுள் கொண்ட மிருகங்களாகவும், மிருகம் கொண்ட கடவுள்களாகவும் மனிதன் அலைந்திருக்கும் நகரின் அடைபட்ட ஜன்னல்களைத் திறக்கும் கரங்களாக இந்தக் கவிதைகளை களமிறக்கி இருக்கிறார் கே.பாலமுருகன். தோட்டத்தை வேர்களாகக் கொண்டவர்கள் மீது ஒரு நகரம் தொடர்ந்து நடத்தும் பண்பாட்டு வன்முறைகளும் வேர்களில் அமிலம் ஊற்றி நிர்வாணமாக்கி அவமதிக்கும் முனைவும் வலி மிகுந்த சொற்களாக இந்தக் கவிதைகளில் அடையாளம் கொள்கின்றன. அந்த வலி தனக்கான சொற்களைத் தானே தேடிக் கொள்கிறது. ISBN எண்:981-08-2908-6