book

ஓநாயும் ஓட்டகமும்

Onaayum Otagamum

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வெ. ராமசாமி
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :சிறுவர்களுக்காக
பக்கங்கள் :26
பதிப்பு :3
Published on :2009
ISBN :9788123415239
Add to Cart

குழந்தைகள் கதைகளை விரும்பிக் கேட்பார்கள், படிப்பார்கள்.  கதைகள் மனிதனின் குண இயல்புகளை மாற்றி அமைக்கும் வலிமையுடையவை.  அது எவ்வாறு?  என்பதைப் பார்ப்போம்.

விஷ்ணு சர்மன் என்ற ஒரு பேரறிஞர், மந்தப் புத்தி கொண்ட, உலக அறிவு கொஞ்சமும் இல்லாத மூன்று ராஜகுமாரர்களை மாமேதைகளாக்கினார்.  எப்படி?

அவர் தான் கண்ட கேட்ட சம்பவங்களையும், வாழ்க்கையில் மனிதனுக்கு ஏற்படுகின்றன அனுபவ நிகழ்ச்சிகளையும், சிறு சிறு கதைகளாகத் தொகுத்து, அக்கதைகளை அன்றாடம் சுவைபடக் கூறி கதைகளின் வாயிலாகவே அவர்களை உலக ஞானம் பெற்றவர்களாக உருவாக்கினார்.

ஏழு புத்தகங்களைக் கொண்ட கதைத் தொடர் ஒவ்வொன்றிலும் மூன்று கதைகள் இருக்கின்றன.  இக்கதைகள் பழங்கதைகளே ஆயினும், அவை நம் நாட்டுப் பள்ளிப் பிள்ளைகளின் மொழித்திறனுக்கு ஏற்ற வகையில் மிக எளிய சொற்களைக் கொண்டு எழுதப்பட்டுள்ளன.

ஒவ்வொரு கதையும் நான்கு பெரிய வண்ணப்படங்களைக் கொண்டது.  ஒவ்வொரு படத்திற்கும் ஏற்ப வாசகர்கள் ஒரு பக்கத்திற்குள் இருக்கும்.  நான்கு பக்கங்கள் படம் நான்கு நான்கு பக்கங்கள் வாசகம் என்ற முறையில் எட்டுப் பக்கங்களில் ஒரு கதை முடிவுறும்.

ஒவ்வொரு கதையின் முடிவிலும் இரு கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.  அவை சிந்தனையைத் தூண்டக்கூடியவை.  அந்தக் கேள்விகளைக் கேட்டு, நண்பர்களுடனும், பெற்றோர்களுடனும், ஆசிரியர்களுடனும் கலந்த பேசலாம். 

கதையிலுள்ள ஒவ்வொரு படத்தைப் பார்த்துப் பேசிப் பழகலாம். கதைத் தொடர்படங்களைப் பார்த்துக் கதை முழுவதையும் சொல்லிப் பழகலாம். ஒவ்வொரு கதையையும் நாடகமாக நடித்துப் பார்க்கலாம்.

முறையாக இக்கதைகளைப் படித்து, நடித்து, பேசிப் பழகிய மாணவர்களுக்குத் தமிழ் மொழியில் பேசுவதற்குத் தடுமாற்றம் ஏற்படாது என்று திண்ணமாக நம்பலாம்.