book

அன்பே வெல்லும் (சிறுவர்களுக்கான கதைகள்)

₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பூதலூர் முத்து
பதிப்பகம் :கங்கை புத்தக நிலையம்
Publisher :Gangai Puthaga Nilayam
புத்தக வகை :சிறுவர்களுக்காக
பக்கங்கள் :160
பதிப்பு :1
Add to Cart

பள்ளிவிட்டு வந்த ஒரு மாலை நேரம்,
சிற்றப்பா.. என்றே, எங்கள் சின்ன மகள் கூப்பிட்டாள்
என்ன வென்று நானும் கேட்க,
பூனைக்கு ஏன் வயறு பெரிதாக இருக்கிறது என்றாள்,
பூனையின் வயிற்றில் சிறு குட்டிகள் வளருதேன்றேன்..
அதற்கடுத்த வாரத்தில்,
நான்கு குட்டிகள் போட்டது பூனை..
கருப்பு, கருப்பும் வெள்ளையும்,
பழுப்பு, பழுப்பும் வெள்ளையும்
என நான்கும் அழகாகவே இருந்தன..
கண் முழிக்காத குட்டிகளை பார்த்து
எங்கள் மகள் குதுகலித்தாள்,
அவைகளின் கீச்சு குரல் கேட்டு,
துள்ளி குதித்தாள்...
சில நாட்கள் சென்றது
குட்டிகள் ஓடியும் குதித்தும்
விளையாடித் திரிந்தன...
எங்கள் சிருமகளும் பார்த்து மகிழ்ந்தாள்...
பள்ளிக்கு போகும் முன்னும்
பள்ளிவிட்டு வந்த பின்னும்
பூனை குட்டிகளோடு விளையாடுவதே
எங்கள் மகளின் இனிய பொழுது போக்கு..