book

தேடிவரும் தெய்வங்கள் (old book rare)

₹34+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :புலவர் அ.வெற்றிவேலன்
பதிப்பகம் :கங்கை புத்தக நிலையம்
Publisher :Gangai Puthaga Nilayam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :198
பதிப்பு :1
Published on :2003
Out of Stock
Add to Alert List

பசுமாடு ஒன்றை கன்றுடன் விலைக்கு வாங்கிய ஒருவன், தன் ஊருக்கு அவற்றை ஓட்டிச்சென்றான். பசுவின் பின்னால் கன்று வந்து கொண்டிருந்தது. திடீரென்று பசு முரண்டு பிடித்து நின்று விட்டது. அவன் எவ்வளவோ முயற்சி செய்தும் நகர மறுத்தது. அங்கு வந்த பெரியவர் என்னவென்று விசாரிக்க அவனும் விவரத்தை சொன்னான். அதற்கு அவர், “கவலைப்படாதே, நீ கன்றை ஓட்டிக்கொண்டு முன்னால் செல், தாய்ப்பசு தானாகவே உன் பின்னால் வந்துவிடும்”, என்றார். அவனும் அவ்வாறே செய்தான். உடனே தாய்ப்பசு

விரைவாக அவனைப் பின் தொடர்ந்து நடக்க ஆரம்பித்தது. இறைவனும் அப்படித்தான். அவன் பிள்ளைகளே எல்லோரும் என்பதால், பிறருக்கு நாம் உதவினால், நம்மைத் தேடி வந்து அவன் அருள்வான்.