நம் தந்தையர் செய்த விந்தைகள்
Nam thanthaiyar seitha vindhaikal
₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கல்கி
பதிப்பகம் :வானதி பதிப்பகம்
Publisher :Vaanathi Pathippagam
புத்தக வகை :பயணக் கட்டுரை
பக்கங்கள் :196
பதிப்பு :4
Published on :2005
Out of StockAdd to Alert List
பயண இலக்கியங்கள் என்று தமிழில் அரும்பியபோது
அற்புதமான கட்டுரைகளை எழுதி அந்தத் துறையில் மிக
அழுத்தமாய்த் தடம் பதித்தவர் பேராசிரியர் கல்கி,
இத்தொகுப்பில் உள்ள பல கட்டுரைகள் எழுதப்பட்டு
எழுபது ஆண்டுகளுக்குமேல் ஆகின்றன. இன்றைக்கும் அந்த
டங்களை அப்படியே கண்முன் கொண்டு வந்து
நிறுத்துகிற அற்புதம் இவற்றில் உண்டு.
வெறும் கட்டுரைகளாக மட்டுமின்றி சமுதாயப்
பிரக்ஞையோடும் எழுதப்பட்ட கட்டுரை கண்ணம்பாடி
அணைக்கட்டைப் பற்றியது (கொலுவும் கோவிலும்) அதே
போல் செளந்தரிய நகரமாக 'மைசூர் தசரா’ காட்சிகளைப்
படித்து மகிழலாம். பேராசிரியரின் புகழ் பெற்ற பல
நகைச்சுவைத் துணுக்குகளை இந்தத் தொகுதியில் உள்ள
கட்டுரைகளில் படித்து மகிழலாம்.
வானதி வெளியீடாக ஏற்கெனவே வெளிவந்துள்ள
'ஸ்வப்ன லோகம்' நூலில் உள்ள நான்கு கட்டுரைகளும்
சேர்த்து, 'நம் தந்தையர் செய்த விந்தைகள்’ ஒரே தொகுதியாக
இப்போது வெளிவருகிறது. அருமையான இந்தப் பயண இலக்கியக் கட்டுரைகளைப் புதுப்பொலிவோடு வழங்குவதில் வானதி பதிப்பகம்
பெருமை கொள்கிறது. அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்.