book

பூந்தளிர்

Poonthalir

₹35+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :செம்பை. சேவியர்
பதிப்பகம் :அறிவுப் பதிப்பகம்
Publisher :Arivu pathippagam
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :71
பதிப்பு :1
Published on :2007
ISBN :9788188048731
குறிச்சொற்கள் :சிந்தனைக்கதைகள், பழங்கதைகள்
Add to Cart

நூலின் பக்கங்களைப் புரட்டும்போது கவிமணி என் நினைவுக்கு வந்தார். எளிமை, இனிமை, ஆழமுடைமை ஆகிய முப்பண்புகளும் அவர் கவிதைகளின் பிஞ்சு நெஞ்சங்களிலே உயர்ந்த கருத்துகளை நல்ல விதைகளாகத் தூவுவதற்குப் பல குழந்தைக் கவிதை எழுத்தாளர் தேவை. அம் மரபில் திரு. செம்பை சேவியர் ஒருவராக அமைவது மிகவும் மகிழ்ச்சிக்குரியதாக அமைகின்றது.

பாடல்களில் ஓசை நயம் சிறப்பாக அமைந்துள்ளது. பாடற்குரிய பொருள்களாகப் பேரளவில் உலகம் முதல் வாழ்க்கைக்குத் தேவையான உழைப்பைத் தரும் தேனீ வரை பாடற் பொருள்களாக அமைந்துள்ளமை மிகவும் பாராட்டத்தக்கது.

'' உழைப்பே உந்தன் செல்வமே, ஓடித்திரிதல் இன்பமே

சலிப்பே இல்லா வாழ்க்கையைச், சரியாய் நீயும் காட்டுறாய்''

என்ற பகுதி தேனீயைப் பற்றிப் பாடினாலும் வாழ்க்கையில் குழந்தைகள் மட்டுமில்லாமல் பெரியவர்களும் கடைப்பிடிக்கவேண்டிய ஒரு பேருண்மையாக அப்பாடற் பகுதிகள் அமைந்துள்ளன.