book

ஹிந்து மஹா சமுத்திரம் பாகம் 3

Hindu Maha Samuthiram Part 3

₹266₹280 (5% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சோ
பதிப்பகம் :அல்லயன்ஸ்
Publisher :Alliance Publications
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :265
பதிப்பு :5
Published on :2011
Add to Cart

வேதங்கள் தொடங்கி, உபநிஷத்துக்கள் வழியே, வேதாந்த சிகரத்தில் ஏறி; சாத்திரம் கண்டு; புராணங்கள் வழங்கி; ஆலயங்கள் எழுப்பி; பக்தி வளர்த்து; சரித்திரம் எழுதி; நீதி பல வகுத்து; சட்டம் இயற்றி; சமூக சிந்தனையில் ஆழ்ந்து; விஞ்ஞானம், கணிதம், இலக்கியம், வான சாத்திரம் என்று விரிந்து... ஆழ்ந்து, அகன்ற இந்த சமுத்திரத்தை அதன் கரையோரத்தில் நின்று பார்த்தவருக்கு ஏற்பட்ட பிரமிப்பை, அவர் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்கிற முயற்சி இது. அறிவுரைகளை மூன்று வகைகளைச் சார்ந்தவைகளாகப் பெரியோர்கள் கூறுகிறார்கள். ஒன்று. 'ப்ரபுஸம்மிதம்'; இது ஒரு அதிகாரி இடுகிற கட்டளைகள் போன்றவை; வேதங்கள் கூறுகிற உபதேசங்கள் இவ்வகையானவை. இரண்டு - ஸுஹ்ருத் ஸம்மிதம்; இவை ஒரு நெருங்கிய நண்பன் காட்டுகிற நல்வழிப் பாதை; உயர்ந்த நிலையை அடைந்துள்ள ஞானிகள் கூறுகிற உபதேசங்கள் இவ்வகையானவை. மூன்று - காந்தா ஸம்மிதம்; நிர்பந்திக்காமல், மேல் நிலையிலிருந்து கொண்டு உபதேசமும் செய்யாமல், பேச்சுவாக்கில், ஒரு மனைவி தன் கணவனுக்கு சரியான வழியை சுட்டிக் காட்டுவது போல, கூறப்படுகிற நன்னெறிகள்; இதி ஹாஸங்கள், புராணங்கள் போன்றவை கூறுகிற அறிவுரைகள் இவ்வகையானவை. புராணங்கள் பற்றிய சுருக்கங்களை இத்தொகுப்பின் இரண்டாம் பாகத்தில் நாம் பார்த்தோம். புராணங்கள் பழமையானவை. புராணம் என்ற வார்த்தைக்கே, பழமையானது என்பது பொருள். வேதங்களிலேயே கூட புராணங்கள் பற்றிய குறிப்புகள் வரு கின்றன. இவற்றில், ஒரு மைய வரலாறு கூறப்படுவதில்லை; ஒவ்வொரு புராணத்திலும் பல நிகழ்ச்சிகள் வர்ணிக்கப்படு கின்றன. அத்துடன், உபநிஷத்துக்களை உள்ளடக்கிய வேதங்கள் கூறுகிற தத்துவங்களிலும் பல, புராணங்களில் விரிவாக இடம் பெறுகின்றன.