book

நிகிதா

Nigitha

₹275+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எண்டமூரி வீரேந்திரநாத், தமிழில்: கௌரி கிருபானந்தன்
பதிப்பகம் :அல்லயன்ஸ்
Publisher :Alliance Publications
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :356
பதிப்பு :4
Published on :2016
Add to Cart

செல்வராசு சரஸ்வதியின் வீட்டு வாசலில் வந்து நின்றான். ஒரு நிமிஷம் தயங்கிவிட்டு, கதவைத் தட்டினான். “யாரது?” கேட்டபடி வந்து கதவைத் திறந்த சரஸ்வதி ஒரு வினாடி திகைத்துப் போனாள்.“நீங்களா?”“எங்கப்பனைக் கூப்பிடு.”“அவரு… வந்து…”“உங்கிட்ட நான் கதை கேக்க வரலை. உள்ள போய் அனுப்பு.”அவள் உள்ளே போன கொஞ்ச நேரத்தில் காத்தமுத்து மருண்டபடி கூசிப்போய் வந்து நின்றார்.அவன் கேட்டான். “சௌக்கியமா இருக்கியாப்பா?”“ஏன்டா அப்படி கேக்கறே?” என்றார் மெதுவாக.செல்வராசு அவரைப் பிடித்து இழுத்துக்கொண்டு தோப்புப் பக்கம் நடந்தான்.“வா, சொல்றேன். நீ வீட்டு பக்கம் வந்து ஒரு வாரமாவுது, அதான் சௌக்கியமான்னுக் கேட்டேன். மோதலெல்லாம் பொஞ்சாதி புள்ளைக் குட்டிங்க நெனைப்பிருந்து ராத்திரியாவது ஆத்துப் பக்கம் வந்துடுவே. இப்ப, புது தினுசா அதுகூட வர்றதில்லை. நீ செய்யறது உனக்கே நல்லாருக்கா?”காத்தமுத்து தலை குனிந்தபடி இருந்தார்