book

எல்லிசின் திருக்குறள் விளக்கக் கையெழுத்துப் பிரதி

Ellisin Thirukural Vilakka Kaiyeluthu Prathi

₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர் பி. மருதநாயகம்
பதிப்பகம் :சீதை பதிப்பகம்
Publisher :Seethai Pathippagam
புத்தக வகை :பொது
பக்கங்கள் :63
பதிப்பு :1
Published on :2009
Add to Cart

திருக்காவலூர் திருமானூருக்குக் கிழக்கேயும் ஏலாக்குறிச்சிக்கு வடக்கேயுமுள்ளது. அங்குதான் முனிவர் பல்லாண்டுகள் தொடர்ந்து பணியாற்றினார். அவர் தமிழிலும் இலத்தீனிலும் இயற்றி வெளியிட்ட நூல்கள் பல அங்கிருந்தே வந்தன. தேம்பாவணியும் அங்கிருந்தே வந்திருக்கலாம்.

இறைபணியில் ஈடுபட்டிருந்த முனிவர் தமிழகத்தின் தலைசிறந்த படைப்பாகிய திருக்குறளைப் பெரிதும் போற்றினார். குறளில் உள்ள அறநெறி அவரைக் கவர்ந்து இழுத்தது. முனிவர் வாழ்ந்த 18ஆம் நூற்றாண்டில் திருக்குறள் பொதுமக்களிடையே இன்று அடைந்துள்ள உயரிய நிலையை எய்தியிருக்கவில்லை. ஆனால் வள்ளுவரின் கருத்துகளைத் தமிழ் மக்களும் பிற நாட்டவரும் அறிந்து பயனடைய வேண்டும் என்னும் ஆர்வத்தால் வீரமாமுனிவர் திருக்குறளை ஆழ்ந்து கற்று, அதன் மெய்யறிவைக் கீழ்வரும் முறைகளில் உலகறியப் பறைசாற்றினார்: