புத்தக விமர்சனம்
எமோஷனல் இன்டெலிஜென்ஸ் 2.0
No Responses Friday 17 Nov 2017 | புத்தக விமர்சனம் |
தடையேதுமில்லை
No Responses Friday 17 Nov 2017 | புத்தக விமர்சனம் |
முதல் உலகப்போர்
One Response Friday 17 Nov 2017 | புத்தக விமர்சனம் |
ஜெயமோகன் குறுநாவல்கள்
இத்தொகுதியில் உள்ள குறுநாவல்கள் சிறுகதைக்குரிய வேகமான கதையோட்டத்துடன் நாவலுக்குரிய விரிவான சித்தரிப்பும் கொண்டவை. இக்கதைகள் விதவிதமான நிலக்காட்சிகளின் வழியாக வேறுபட்ட வாழ்க்கைகளைக் கண்டபடி பயணம் செய்யும் அனுபவத்தை ஏற்படுத்துகின்றன. இதுவரை தொகுப்புகளில் சேர்க்கப்படாத குறுநாவல்கள் பல உள்ள முழுமையான தொகுப்பு இது.
No Responses Friday 17 Nov 2017 | புத்தக விமர்சனம் |
கல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்
No Responses Friday 10 Nov 2017 | புத்தக விமர்சனம் |
ஆண்பால் பெண்பால்
எல்லா விலங்குகளிலும் உள்ள ஆண்-பெண் பாகுபாடு போல இல்லை. மனிதர்களில் உள்ள ஆண்-பெண் பாகுபாடு. ஆணின் விலா எலும்பிலிருந்து பிறந்து வேறு ஒரு விலங்காகவே மாறியிருக்கிறாள் பெண். சிந்திக்கத் தெரிந்த விலங்காக இருப்பதால் ஏராளமான மாறுபட்ட கருத்துக்கள் இருவருக்குள்ளும். நடை, உடை, பாவனை தொடங்கி. எதிர்பார்ப்பு நம்பிக்கை, பிடிவாதம், இயலாமை, இயல்பு, கையெழுத்து, குரல் ,சிந்தனை எல்லாவற்றிலும் இழையோடும் மெல்லிய துருவபந்தம். பொழுதுபோக்கு மட்டுமின்றி, அரசியல் விஷயங்களிலும் கணவன்களிடம் விலகி முடிவெடுத்தார்கள் மனைவிகள். அந்தவிதத்தில் பொழுதுபோக்கு, அரசியல் இரண்டிலும் தன்னிகரில்லா ஒரு வரலாற்று நாயகன் இநத் நாவலின் மையப்புள்ளியாகியிருக்கிறார்
No Responses Friday 10 Nov 2017 | புத்தக விமர்சனம் |
ஆட்டிசம் : சில புரிதல்கள்
தங்களின் குழந்தைக்கு இன்னது என்று உணர்ந்துகொள்ள முடியாமல் இருக்கும் ஆயிரக்கணக்கான பெற்றோரில் ஒருவருக்காவது இப்புத்தகம் பயன்பட்டால் மிகுந்த மகிழ்ச்சியடைவோம். சரி, என் குழந்தை நல்லா இருக்கு. நோ ப்ராபளம் என்பவரா.... நீங்கள்... அப்படியெனில்... நீங்களும் தான் எங்களின் இலக்கு. குறைவான ஆட்டிசப்பாதிப்பு உள்ள குழந்தைகளையும், அதிலிருந்து மீண்டுவரும் குழந்தைகளையும் சிறப்பு பள்ளிகளுக்கு அனுப்பவேண்டாம், சாதாரணப்பள்ளிக்கு அனுப்புங்கள் என்று மருத்துவர்களும், தெரபிஸ்டுகளும் வலியுறுத்துகின்றனர். ஆனால், இக்குழந்தைகளை பெரும்பாலான பள்ளிகள் சேர்ந்துக்கொள்ள மறுத்துவிடுகின்றன. அதற்கு பள்ளி சொல்லும் காரணம், தங்கள் பிள்ளைகளுக்கு ஏதாவது வந்துவிடுமோ என்று மற்ற பெற்றோர் பயப்படுவதாக சொல்கிறது. தொட்டுவிட்டால் ஒட்டிக் கொள்கின்ற தொற்று நோய் அல்ல ஆட்டிசம். சாதாரணக்குழந்தையின் பெற்றோராக நீங்கள் இருக்கும் பட்சத்தில், ஆட்டிசக்குழந்தைகளை ஒதுக்க வேண்டாம். அவர்களையும் நாம் இயல்பு வாழ்க்கையை வாழவழி செய்ய முடியும். இவர்களுக்கான உரிமையை மறுப்பவரிடம் இக்குழந்தைகளின் சார்பில் நீங்களும் வாதிட முடியும். அதற்கு இப்புத்தகம் துணை நின்றால் உள்ளபடியே மகிழ்வோம்.
No Responses Friday 10 Nov 2017 | புத்தக விமர்சனம் |
எஸ்.ராமகிருஷ்ணன் கதைகள்
கொண்டு வந்துவிட முயன்றதன் விளைவுதான் எனது எழுத்துகள். எஸ்.ராமகிருஷ்ணன் நவீன தமிழ்ச் சிறுகதையில் புதிய போக்குகளை உருவாக்கிய எஸ்.ராமகிருஷ்ணனின் முழுமையான சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு. காலத்தால் புறக்கணிக்கப்பட்டு சாம்பல் படிந்து கிடக்கும் கிராமங்களையும், நகரங்களை நோக்கி இடம் பெயர்ந்தவர்களாகத் தனிமையும் துயரமுமாக அலைவுறும் விளிம்பு நிலை மனிதர்களையும் ராமகிருஷ்ணன் படைப்புகள் எங்கும் காணமுடிகிறது. கதை சொல்லலில் பல புதிய சாத்தியங்களை உருவாக்கும் இவரது மிகுபுனைவும் கவித்துவ மொழியும் தமிழ்க் கதையாடலில் மிகத் தனித்துவமானது. ராமகிருஷ்ணனின் சிறுகதைகள் புதியதொரு தமிழ்ப் புனைவியலை உருவாக்குகின்றன என்பதே அதன் சிறப்பம்சம்.
One Response Friday 10 Nov 2017 | புத்தக விமர்சனம் |
ப்ளிங்க்
நம்மைச் சுற்றியிருக்கும் உலகத்தை நாம் எப்படி புரிந்துகொள்கிறோம் என்பதை `தி டிப்பிங் பாயிண்ட்’ புத்தகத்தில் வழியாக மறுவரையறை செய்த மால்கம் க்ளாட்வெல், தற்போது `ப்ளிங்க்’ புத்தகத்தின் வழியாக நமக்குள் இருக்கக்கூடிய உலகத்தை நாம் புரிந்துகொள்ளும் உத்திகளைக் கற்றுத்தருகிறார். ஒரு தம்பதியை சில நிமிடங்கள் கூர்ந்து கவனித்து, அவர்கள் பேசிக்கொள்வதை உள்வாங்கி, அவற்றின் வழியாக அவர்களுடைய திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக நீடிக்குமா? அல்லது விவாகரத்தில் முடிந்துவிடுமா? என்று கணித்துவிட முடியுமா? உங்களுக்கு அறிமுகம் இல்லாத ஒரு மனிதரைச் சந்திக்கும்போது, அவர் குறித்த ஒரு துல்லியமான நிலைப்பாட்டை உங்களால் எடுத்துவிட முடியுமா? உங்களுக்கு முற்றிலும் புதியதொரு விஷயத்தைப் பார்த்த மாத்திரத்தில், அது குறித்த தீர்மானமான முடிவுக்கு உங்களால் வந்துவிடமுடியுமா? மேற்கண்ட மூன்று கேள்விகளுக்கும் முடியும் என்பதுதான் உங்கள் பதில் என்று வைத்துக் கொள்வோம். எனில், உங்கள் கணிப்பு எல்லா சமயங்களிலும் சரியாக இருக்குமா? எப்போது சரியாக இருக்கும்? அல்லது எப்போது தவறாகப் போகக்கூடும்…? மால்கம் க்ளாட்வெல்லின் ஆய்வில் உருவாகியிருக்கும் இந்தப் புத்தகம், உங்களைப் பற்றிய, உங்கள் முடிவெடுக்கும் திறன் பற்றிய கேள்விகளுக்கு உளவியல் ரீதியான பதில்களைக் கற்றுத்தருகிறது. வேக உணர்திறன்(Rapid Cognition)என்பது தேவதைகளின் ஆசிபெற்றவர்களுக்கு மட்டுமல்ல, சாமானிய மனிதருக்கும் சாத்தியமாகக்கூடியது என்பதை உளவியல் ரீதியாக நிறுவுகிறார் மால்கம் க்ளாட்வெல். ஆங்கிலத்தில் எழுதப்பட்ட இந்தப் புத்தகத்தை அதன் உள்ளடக்க வீரியத்துக்குத் துளியும் பங்கம் வராமல் சுவாரஸ்யமாக மொழிபெயர்த்திருக்கிறார் சித்தார்த்தன் சுந்தரம். ”மிஸ்டர் க்ளாட்வெல் வரம் பெற்ற ஒரு கதை சொல்லி, எங்கே சென்றாலும் நினைவில் நிற்கக்கூடிய பாத்திரங்களையும், மகிழ்ச்சிகரமான நிகழ்ச்சிகளையும் கண்டறியக் கூ டிய திறமையுள்ளவர்” – ஜார்ஜ் ஆண்டர்ஸ், வால் ஸ்ட்ரீட் ஜர்னல் இந்தப் புத்தகத்தை வாங்குங்கள்: நீங்கள் சந்தோஷப்படுவீர்கள்” – டேவிட் புரூக்ஸ், நியூயார்க் டைம்ஸ் புக் ரெவியூ.
No Responses Friday 10 Nov 2017 | புத்தக விமர்சனம் |
ஒரே ஒரு ஊரிலே
நகரமும் கிராமமும் அல்லாத ஒரு ஊரில் நான்கு நண்பர்களுக்குள் நிகழும் நட்பு பற்றிய கதை. அவர்களின் உலகம், மகிழ்ச்சி, ஒரு கோடை விடுமுறைக்கு என்ன செய்தார்கள், எங்கு சென்றார்கள், யாரை சந்தித்தார்கள், என்ன விபரீதம் நிகழ்ந்தது, அவர்கள் நட்பு என்ன ஆனது என்பதே இந்த சிறார் நாவல் ‘ஒரே ஒரு ஊரிலே’
No Responses Wednesday 08 Nov 2017 | புத்தக விமர்சனம் |