இந்த கதை பதினாலாம் நூற்றாண்டில் நடைபெறுகிறது. அந்த காலத்தில் ஜப்பானில் சுரங்கம் தோண்டும் முயற்சிகள் தீவிரமாக இருந்தன. குறிப்பாக நிலக்கரி மற்றும் தாதுக்களை தேடி காட்டை அழிக்க ஆரம்பித்திருந்தார்கள். இந்த கதையிலும் அதுபோன்ற இரும்பு நகரம் ஒன்று வருகிறது. அது காட்டின் மேற்குபகுதியில் உள்ளது. அங்கே நிலக்கரி மற்றும் இரும்பு தாது எடுப்பதற்காக தொழுநோயாளிகள் பயன்படுத்தபடுகிறார்கள்.இரும்பை கொண்டு ஆயுதங்கள் செய்து அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்று ஆசைப்படும் யபோஷி என்ற சீமாட்டி அந்த இரும்பு நகரை ஆள்கிறாள். அவள் காட்டை தன் கட்டுபாட்டிற்குள் வைத்திருக்கிறாள்.