வணக்கம், எல்லாம் வல்ல எம்மான் முருகப் பெருமானது குருவருளினாலும் அகிலாண்ட கோடி பிரம்ம நாயகியான அன்னை
புவனேஸ்வரியின் வற்றாத கருணையினாலும் நவக்கிரகங்களின் நல்லாசியினாலும் ' அதிர்ஷ்ட அளிக்கும் நவரத்தினங்கள் '- என்னும் இவ்வினிய நூலை அன்பும் நேசமும் கொண்ட வாசகர்கள் பயனடையப் படைத்துள்ளேன். நவரத்தினங்கள் வரிசையில் இடம் பெறும் இனங்கள் அனைத்துப் பற்றிய ஓர் அரிய மதிப்பீடு, அதன் வரலாறு, தன்மை, கிடைக்குமிடங்கள், வண்ணங்கள், மருந்துவப்பயன்கள், ஜோதிட,எண் கணித, கைரேகை போன்ற கலைகள் மூலமாக பயன்கள் விவரிக்கப்பட்டுள்ளன. இது வல்லாது, மேலும் அதிர்ஷ்டம் அளிக்கும் ஏனைய இன்றியமையாத கற்கள் பற்றிய விவரங்களும் அளிக்கப்பட்டுள்ளன. தங்களுக்கு ஏற்ற நவரத்தினங்களைத் தேர்வு செய்ய தக்க ஆலோசனை பெற என்னிடம் தொடர்பு கொள்ளலாம். எல்லாருடைய வாழ்விலும் நவக்கிரகங்களின் நல்லருளால் நவரத்தினங்கள் ஒளி வீச வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.
- முருகடிமை துரைராஜ்.