ஜோதிடம் என்பது விஞ்ஞானத்தை அடிப்படையாகக் கொண்டது. நம் வாழ்க்கையிலும் உலக நடப்பிலும் துட்பமான உண்மைகளை, தெளிவாகவும் சுருக்கமாகவும் எடுத்துக்கூறுகிறது. தவ வலிமை கொண்ட பெரிய மகரிஷிகளால் உருவாக்கப்பட்டது ஜோதிடம். இன்றைய நவீன விஞ்ஞானம் , மனித வர்க்கப் பிரச்சனைகளை ஒரு குறிப்பிட்ட அளவுக்குத் தீர்த்து வைப்பதைப்போல் அல்லாமல், ஜோதிடத்தில், மனித குலத்திற்கு ஏற்படும் எல்லாப் பிரச்சனைகளையும் தீர்ப்பதற்கு ஏதுவாக வழி வகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. நட்சத்திரங்களும் கிரகங்களும், மனித வாழ்வைப் பெரிதும் பாதிக்கின்றன. நமது ஒவ்வொரு செயலும் ஒரு காரணம் இருக்கிறது. ஒவ்வொரு காரணத்திற்கும் ஒரு செயல் இருக்கிறது. இவை பின்னிப் பிணைந்து பலவற்றை உருவாக்குகின்றன. சூரியன், கோள்களில் முக சக்தியுள்ள கிரகம். சூரிய சஞ்சாரத்தால் இரவும் பகலும் தோன்றுகிறது. பருவங்கள் மறுகின்றன. தாவரங்கள் முதல் ஞகல உயிரினங்களும் உருவாகிவளருகின்றன. மழைக்காலத்திலும், கத்ரி காலத்திலும் நமது உடல் நலம் குளிராலும் வெப்பத்தாலும் பாதிக்கப்படுகிறது. சந்திரடன், பூமிக்கு வெகு அருகிலிருக்கும் கிரகம். இதன் சக்தி, நமக்குச் சிறந்த அறிவாற்றலைக் கொடுக்கிறது. ஒவ்வொரு உயிருக்கும் மூளையே பிரதானமானதி. நரம்புகளின் மூலமாக இந்த மூளை, நம்மைக் கட்டுப்படுத்துகிறது. இந்த மூளையை ஆட்டி வைப்பது சந்திரன் தான். இதே சந்திரன் சித்தப்பிரமையையும் உண்டாக்கும். உங்களின் ஜாதகத்தை நீங்களே கணித்து, அதில் வரும் நன்மை தீமைகளை அறிந்து, நடந்து கொள்வதற்காகவே, இந்நூலை உங்களுக்கு அளிக்கிறேன்.
-ஜோதிட சாகரம் புலிப்பாணிதாசன்.