ஃப்ரெஞ்ச் நாட்டில் நடந்த உலக எழுத்தாளர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அந்நாட்டின் சிறப்பு அழைப்பாளராக இந்தியாவின் சார்பில் சென்று வந்தார்கள் திருமதி வாஸந்தி அவர்கள். அப்படியே அந்நாட்டிற்குப் போகும் வழியிலுள்ள சில ஐரோப்பிய நாடுகளுக்கும் போய்வந்தார். ரோம், வியென்னா, ஜெனீவா, ஹாலந்து, லண்டன், மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கும் பயணம் செய்தார். அந்தப் பயண அனுபவத்தை கல்கி இதழில் 22 வாரம் தொடர்ந்து எழுதிவந்த கட்டுரைகளின் தொகுப்புதான் உலா வர ஓர் உலகம் என்ற புத்தகமாக உங்கள் கைகளில் தவழ்கிறது.