book

நிழலும் நிஜமும்

Nilalum Nijamum

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சேலம்.பா. அன்பரசு
பதிப்பகம் :தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்
Publisher :Tamarai publications (p) ltd
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :90
பதிப்பு :1
Published on :2009
Add to Cart

இரண்டாம் உலகப் போர் முடிந்த பிறகு வெவ்வேறு நாடுகளைச்சேர்ந்த போர்க்கைதிகளின் பிணங்களை யெல்லாம் தேடிக்கண்டுபிடித்து கல்லறைகள் அமைக்கப்பட்ட போது தமிழர்கள் உள்ளிட்ட ஆசிய ஒப்பந்தக் கூலிகள் மட்டும் புறக்கணிக்கப்பட்டார்கள்.

ஆமாம்.  அவர்கள் கூலிகள் என்றுதான் அழைக்கப்பட்டார்கள். பலநாடுகளைச் சேர்ந்த போர்க்கைதிகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்ட நேரத்தில் தமிழ் நெஞ்சங்களை எவரும் கண்டுகொள்ளாத்து வருத்தம் அளிக்கும் செயலாகத்தான் உள்ளது.

இந்த நூல் எழுத என்னைத் தூண்டியதே போர்க்கால வன்முறைகளும் அந்தச் சந்தடியில் முகவரிகளை இழந்துவிட்டு அப்பாவிகளைப் பற்றிய சிந்தனையும்தான்.

அவற்றைப்பற்றியெல்லாம் நூலில் படிக்கப் போகிறீர்கள்.  இதுவரை தமிழில் எழுதப்படாத அண்மைக்கால (1939-43) வரலாற்றுச் செய்திதான் இருந்தாலும் இதுவரை நமது மொழியில் வெளிப்படுத்தப்படாத உண்மைகள்.

இங்ஙனம்,
சேலம் பா. அன்பரசு