book

கருணை மழை

Karunai Mazhai

₹170+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பாலகுமாரன்
பதிப்பகம் :விசா பப்ளிகேஷன்ஸ்
Publisher :Visa Publications
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :301
பதிப்பு :3
Published on :2008
Add to Cart

திரு. பாலகுமாரன் எழுதிய நாவல். இந்நாவல் குறித்து வாசகர்கள் எழுதிய கடிதங்கள்.

கருணை மழைக்கான கடிதம்

அக்டோபர் இரண்டாம் வாரத்தில் தங்களின் 'கருணை மழை' நாவல் கிடைத்தது. சாதாரணமாகப் படித்தேன்.  படித்த அன்றே மாலையில் மழை பெய்த்து.  எப்போதுமே உங்களின் நாவல்களைப் பலமுறை படிப்பது வழக்கம்.  அதேபோல இதையும் படிக்க மறுநாளும் மழை. என்னவரிடம் 'கருணை மழை' படிக்கப் படிக்கப் படிக்க மழை பெய்கிறது என்று கூறினேன்.  அவர், 'உனக்குத் தான் நிறைய நேரம் இருக்கிறதே.  படி படி, நன்றாகப் படி நிறைய மழை பெய்யட்டும்' என்றார்.

அப்போதும் இதன் முழுவீச்சும் எனக்குப் புரியவில்லை. ஆனால் மகிழ்ச்சியோடு தினமும் படித்துக்கொண்டு இருந்தேன்.  திடீர் என்று மேட்டூர் அணை நிரம்பியது.  44 வருடங்களுக்குப் பிறகு 2 லட்சம் கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

அன்பு மகள்,
ம. கௌரி
ஈரோடு.