book

நீங்கள் கேட்டவை பாகம்-2

Neengal Ketavai Part 2

₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :புறாபாண்டி
பதிப்பகம் :விகடன் பிரசுரம்
Publisher :Vikatan Prasuram
புத்தக வகை :விவசாயம்
பக்கங்கள் :159
பதிப்பு :1
Published on :2010
ISBN :9788184762921
குறிச்சொற்கள் :வேளாண்மை, மீன்வளம், கால்நடை, கூட்டுப்பண்ணை, தொழில்நுட்பங்கள், சந்தேகங்கள்
Out of Stock
Add to Alert List

தேனீக்கள் மொய்க்கட்டும்!

வாய்க்கு ருசியாக உணவைத் தயாரிப்பதற்குள் ஆயிரம் சந்தேகங்கள் ஏற்படுகின்றன.  அந்த சந்தேகங்களை சமையல் நிபுணர்கள் தீர்த்துவைக்கின்றனர்.  சரி, அந்த உணவுக்குத் தேவையான காய்கறிகளைப் பயிரிடும்போதும், நெல் நடவின்போதும் எத்தனை சந்தேகங்கள், கேள்விகள் எழும்..?

வேளாண்மை, மீன்வளம், கால்நடை, கூட்டுப்பண்ணை, செல்வில்லாத தொழில்நுட்பங்கள் ஆகிய துறைகளில் வாசகர்களின் கேள்விகளுக்கு, அனுபவம் வாய்ந்த, விவசாயிகள், வேளாண் விஞ்ஞானிகள், கால்நடை மருத்துவர்கள், தொழில்நுட்ப அதிகாரிகள் என்று பலரிடமிருந்து ஆதாரபூர்வமான, தெளிவான பதில்களைப் பெற்று 'பசுமை விகடன்' இதழ்களில் தொகுத்து வருகிறார் புறா பாண்டி (பொன். செந்தில்குமார்). மேலும் தகவல்களைப் பெற வசதியாக பதில் சொன்னவர்களின் முகவரி, தொலைபேசி எண்கள் போன்ற விவரங்களும் கூடியவரை சேர்த்துத் தருகிறார்.

இப்படி, 'பசுமை விகடன்' இதழ்களில் வெளியாகி வரும் 'நீங்கள் கேட்டவை!' கேள்வி-பதில்களின் தொகுப்பு முதல் பாகமாக ஏற்கெனவே நூல் வடிவில் வெளி வந்திருக்கிறது.  அதன் தொடர்ச்சிதான் இந்த இரண்டாம் பாகம்.

'தேனீக்கள் தோட்டத்தில் மொய்த்தால் மகசூல் உயரும், விளைச்சல் அமோகமாக இருக்கும்' போன்ற சுவையான விவரங்களும் இதில் உண்டு.  தொழில்நுட்ப விளக்கம், தொடர்பு முகவரி என்று விளக்கமாக தகவல்கள் இடம் பெறுவதால், வாசகர்களின் மனதில் இந்த நூல் ஆழமாக பதியும்.

- ஆசிரியர்