book

அகரமுதல எழுத்தெல்லாம் அறியவைத்தாய் காதலி

Agaramuthala Eluthellaam Ariyavaithaai Kathali

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அ.வ. உத்திரக்குமரன்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :80
பதிப்பு :2
Published on :2009
குறிச்சொற்கள் :கற்பனை, சிந்தனை, கனவு, காதல்
Add to Cart

தெருக்களில் குச்சி ஐஸ் விற்கிறவரிடம் ரோஸ்கலர் ஐஸாக வாங்கி நாக்கை சிவக்க வைத்துமகிழ்ச்சிக்குள்ளாக்குகிற சிறுபிள்ளை மனசு நண்பர் அ.வ. உத்திரக்குமாரனுக்கு, இருண்மையின் ஒளிக்கீற்றுகளுக்கு குறுக்கு வெட்டுத்தோற்றம் கண்டுபிடித்து, மிரட்டி எடுக்கிற மேதாவித் தனமான நடை கொண்டு எழுதாமல் பம்மாத்துகளற்ற எச்சாயமும் ஏற்றுக் கொள்ளாமல் இயல்பாய் தனக்கான மொழியில் காதல் கவிதைகள் எழுதி இருக்கிறார். பெரும்பாலும் இவர் எழுதிய கவிதைகளை கையெழுத்துப் பிரதிகளிலேயே படித்திருக்கிறேன். காதல் கவிதைகள் கொட்டிக்கிடக்கிற இச்சூழலில் நண்பர் அ.வ. உத்திரக்குமரனின் கவிதைகள் ஒரு கனம் சில்லிடும் மனசையோ சிரிப்பையோ எல்லோருக்கும் வழங்கும் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.


நிலைத்த அன்புடன்
பொன்.ஏ. ராஜசேகர்
சூரியன் பண்பலை நிகழ்ச்சி தொகுப்பாளர்