முத்த வைப்பு தீர்மானம்
Mutha Vaippu Theermanam
₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பொன். இரவீந்திரன்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2009
குறிச்சொற்கள் :கற்பனை, சிந்தனை, கனவு
Add to Cartஎல்லா தவங்களிலும் வரங்கள் வந்து விடுவதில்லை. எல்லாத் தவங்களுக்கும் சாபங்கள் நிகழ்ந்துவிடுவதும் இல்லை. சிலருக்குக் கொஞ்ச நேரத் தவத்திற்கே பெரிய வரங்கள். சிலருக்கு காலம் முழுக்கத் தவமிருந்தும் வரம் கிடைக்காமலே போய் விடுகிறது.
யாருக்கோ யார் யாருக்கோ வாழ்க்கைப்பட்டுப் போய் விடுகிறார்கள். யார் யாரோ. அந்த யாரோவை ஏதோவொரு சூழலில் ஏதோவொரு இடத்தில் யாருடனோ மறுபடி பார்த்து விடுகிறபோதுத நேர்கோட்டில் சந்திக்க முடியாமல் பனித்து விடுகின்றன கண்கள். ஆயிரமாயிரம் கேள்விகள் உள்ளுக்குள்ளே போர் நடத்தி இரணப்படுத்திவிடுகின்றன.
இஆறாத காயங்கள் மறபடி மறபடி பீறிக்கொண்டு சம்மணமிட்டுக் கொள்கின்றன. அத்தகைய சுகங்களும் வலிகளும் காயங்களுமே, இந்தக்க கவிதைகளின் சொல் பொருள் ஆவி. இப்போதும் நினைத்தாலும் சுகமாகத்தான் இருக்கிறது.
பொன். இரவீந்திரன்