book

எது அறிவு? எது அறிவீனம்?

Ethu Arivu?Ethu Ariveenam?

₹35+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ம. கோபிநாதன்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :பொது
பக்கங்கள் :116
பதிப்பு :1
Published on :2007
குறிச்சொற்கள் :வழிபாடுகள், நம்பிக்கை, தெய்வம், பக்தி, முயற்சி, திட்டம், உழைப்பு, முன்னேற்றம்
Add to Cart

வேதாந்தம் பற்றிய பொது அபிப்ராயம் என்ன வென்றால், அது வாழ்வின் அன்றாட விஷயங்களையும் தேவைகளையும் 
குறிப்பிடாமல்  கடவுள், ஆன்மா போன்ற தத்துவங்களைக் கூறுகிறது. அதனால் வேதாந்தம் இளைஞர்களுக்கு அல்ல என்றும், வயது முதிர்ந்த -வலு இழந்த கிழங்கட்டைகளுக்கு என்றும்  பரவலாக இருக்கிறது. ஆனால், வேதாந்தம் கூறுவது  வாழ்க்கை முறையைப் பற்றியும், அன்றாட தேவைகள்  பற்றியும், சிறந்த  வாழ்க்கை முறையைப் பற்றியும், அதற்கான  நடைமுறையைப் பற்றியும் என்பதைத் தெளிபடுத்தவே இம்மூன்று நூல்களும் உண்மையிலிருந்து வெகுதூரம் வந்துவிட்டதால், நம்மைச் சுற்றி நாமே மிகப்பெரிய, வலிய போலித்தன்மையைச் சுற்றிக் கொண்டதால், உண்மைகளை எளிமைப்படுத்தி உரைக்க வேண்டிய நிலை வந்துவிட்டது. ஆனாலும், உண்மைகளை நம் நிலைக்குத் தாழ்த்திக் கொண்டு வராமல், அதன் நிலைக்கு  நாம் உயரவேண்டிய நிலையை வற்புறுத்தி சொல்வதில் மட்டுமே எளிமையைக்கையாண்டிருக்கிறேன். வேதாந்தக் கருத்துகள் பலருக்கும் தெரிந்துதான் இருக்கிறது. ஆனால், அவற்றை  வாழ்வில் எப்போது, எப்படி  பயன்படுத்த வேண்டும்  என்று அறியாதிருப்பதால் அவற்றைக் கூறும் விதமாய் இதை எழுதியிருக்கிறேன். படிப்பவர்கள் தெரிந்து கொள்ளலாம், தெரிந்தவர்கள்  புரிந்து கொள்ளலாம். புரிந்தவர்கள் நடைமுறைப்படுத்தலாம்.

                                                                                                                                            -  பதிப்பகத்தார்.