மருத்துவ மூட நம்பிக்கைகளும் விஞ்ஞான விளக்கங்களும்
Maruthuva Mooda Nambikaigalum Vignyana Vilakkangalum
₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர்.எஸ். முத்துச்செல்லக்குமார்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :128
பதிப்பு :2
Published on :2007
குறிச்சொற்கள் :தகவல்கள், மருத்துவ முறைகள், நோய்கள், சிகிச்சைகள், பொது அறிவு
Out of StockAdd to Alert List
இன்று மருத்துவம், மற்ற துறைகளிலிருந்து மிகவும் உயர்வாக கருதப்படுவதற்கு முக்கிய காரணம், அது உடலோடு மட்டுமல்ல அது மனதோடும் நினைவோடும், உயிரோடும் சம்பந்தப்பட்டுள்ளது. வாங்கும் பொருளுக்கு கடையில் உத்திரவாதம் அளிப்பதைப்போன்று, நோயைத்தீர்க்க வருபவர்களின் உயிருக்கே உத்திரவாதம் தரக்கூடியவர்களாக மருத்துவர்கள் இருப்பதனால்தான் உலகம் இவர்களை 'தெய்வமாக மதிக்கிறது, துதிக்கிறது. நோய்களைத் தீர்ப்பதற்கும் ஆரோக்கியமாக மக்கள் வாழவும் செய்ய மருத்துவர்களால் மட்டும் முடியாது. நோயாளிகளின் பூரண ஓத்துழைப்பும் தேவை. இவ்வாறு அவர்கள் ஒத்துழைப்புத்தர மக்கள் போதுமான மருத்துவ அறிவைப் பெருக்கிக்கொள்ள வேண்டும். மக்கள் மனதில் வேரூன்றிவிட்ட, ஏராளமான மூட நம்பிக்கை, பழக்கவழக்கங்கள தான். இவற்றை ஒழித்தால்தான், மக்கள் ஆரோக்கியத்தை குறித்து முழுமையான அறிவைப்பெற்று நலமுடன் வாழ முடியும். அதற்கான முதல் முயற்சியாக ஹெல்த் மாதயிதழில் முதன்முதலில் 1993 ஆண்டு ஆகஸ்ட் திங்களில் வெளிவந்த போது, அதில் தவறுகளைத் தவிர்ப்போம் என்ற தலைப்பில் எழுதினேன். அதனைத்தொடர்ந்து பல்வேறு மேடைகளில் பேசியும், எழுதியும் வந்தேன். உடல் நோயையும்,உள்ள நோயையும் குணப்படுத்தும் முன்பு , பல்வேறு சமூக நோய்களையும் குணப்படுத்தி தீர்க்க வேண்டியுள்ளது. அதன் முதல் முயற்சி தான் இந்த நூல் இந்த அரிய முயற்சி தொடரும் என்பதில் உறுதியாய் இருக்கிறேன். இந்நூலின் மூலம் நோயாளிகளுக்கு மருந்துகளும் , உணவுகளும் வழங்குவதில் மக்களிடையே காணப்படும் தவறான எண்ணங்களையும் அகற்றுகிறார். தமிழ்ச் சமுதாய மக்களின் மருத்துவ அறிவு வளர்ச்சிக்கு இந்நூல் பெரிதும் துணைபுரியும்.
- முத்துச் செல்லக்குமார்.
- முத்துச் செல்லக்குமார்.