book

சிந்தனை விருந்து

Sinthanai Virunthu

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தென்கச்சி.கோ. சுவாமிநாதன்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :சிந்தனைகள்
பக்கங்கள் :160
பதிப்பு :1
Published on :2007
குறிச்சொற்கள் :முயற்சி, திட்டம், உழைப்பு, முன்னேற்றம், தன்னம்பிக்கை
Add to Cart

இன்றைக்கு நாம் பார்க்கிறது எல்லாமே  பொய் முகங்கள்! என்று வேதனைப்பட்டார் ஒரு நண்பர். அப்படியா சொல்றீங்க என்றேன்.
ஆமாம் உண்மையான மனிதனின் முகம் உள்ளே இருக்கு அது அவனுக்கு அடையாளம் தெரியறதில்லை.என்றார். நண்பர் சொல்வது உண்மைதான் . அந்தக்காலத்திலேயே யாரைத் தேடுகிறீர்கள் என்று ஒரு பெரியவரைப் பார்த்துக் கேட்டார்களாம். நான் மனிதனைத் தேடிக் கொண்டிருக்கிறேன். என்று சொன்னாராம் அந்தப் பெரியவர். இது நாம் கேள்விப்பட்ட இரு செய்தி. அன்றைக்கு அவர் தேட ஆரம்பித்தார். இன்றைக்கும் நாம் தேடிக்கொண்டிருக்கிறோம். மக்கள் மத்தியில் அப்படி தேடுகிறபோது பளிச்சென்று சில மனிதர்களின் முகம் பார்வையில் படுகின்றது. அந்த முகங்களை மற்றவர்களுக்கு அடையாளம் காட்டுகிற முயற்சியே இந்தப் புத்தகம். சென்னை வானெலியின் இன்று ஒரு தகவல் நிகழ்ச்சியில் ஏற்கனவே சொல்லப்பட்ட தகவல்கள் இவை. இனிய சகோதரர் இராம.நல்லதம்பி இதைப் புத்தகதாக்க் கொண்டு வருகிறார். கற்பகம் புத்தகாலயம்  இதை வெளியிடுகிறது. இது எனக்குப் பெருமையாக இருக்கிறது. இந்தசமயத்தில் இன்னொரு வேண்டுகோள். ஒலி பரப்புக்காக பேச்சு வழக்கில் சொல்லப்பட்டது. அப்படியே எழுத்து வடிவில் இங்கே வந்திருக்கிறது. அதன் காரணமாக பிறமொழிச் சொற்கள் ஆங்காங்கே தலைகாட்டியிருப்பதைத் தவிர்க்க முடியவில்லை.  அதைப் பொருட்படுத்த வேண்டாம் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன் அன்படன் தென்காசி