book

உங்களை வெற்றிமுனைக்கு அழைத்துச் செல்லும் பொன்மொழிகள்

Ungalai Vetrimunaikku Azhaithu Sellum Ponmozhigal

₹65+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கே.எஸ். சுப்ரமணி
பதிப்பகம் :தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்
Publisher :Tamarai publications (p) ltd
புத்தக வகை :பொன்மொழிகள்
பக்கங்கள் :83
பதிப்பு :3
Published on :2015
Out of Stock
Add to Alert List

உலக அளவில் வெற்றி பெற்றுள்ள ஒவ்வொரு தனிமனிதரும் மற்றவர்களைவிடக் கொஞ்சநேரம் அதிகமாகத் தைரியத்துடன் நின்று செயல்பட்டுள்ளனர். உலக சாதனையாளர்களுடன், இந்த நூலில் ஆ.பெ.ஜெ.அப்துல்கலாமின் வாழ்க்கைக்கு வழிகாட்டிய பொன்மொழி, தமிழில் ஐ.ஏ.எஸ். தேர்வை எழுதி வெற்றி பெற்ற உதயசந்திரன் என்பாருக்கு வழிகாட்டிய பொன்மொழி, கடவுள் நம்பிக்கையுள்ள ஸ்ரீ அரவிந்தரும், நாத்திகரான வால்ட்டேரும் "உங்கள் காரியத்தை முழு நம்பிக்கையுடன் செய்வதே உலகில் முக்கியம்'' என்று கூறும் பொன்மொழிகளும் எந்த வயதிலும் எவரையும் உற்சாகமாக வாழத் தூண்டும். இதனால் தைரியமாக நேர்வழியிலேயே வாழ்வீர்கள். தடைகளையும், பிரச்னைகளையும் நேர்வழியிலேயே வெல்வீர்கள்.உங்கள் மனதையும் அறிவையும் எந்தெந்தப் பொன்மொழிகள் வளப்படுத்தும் என்று தோன்றுகிறதோ, அவற்றை "டிக்" செய்து தினமும் பத்து நிமிடங்களாவது தொடர்ந்து படியுங்கள் ஒருமுகச் சிந்தனையுடன் பத்து நிமிடங்கள் படிக்கும்போது அவை ஆழ்மனதில் நன்கு பதியும். ஆழ்மனம் பிரபஞ்ச மனத்துடன் தொடர்பு கொண்டு நீங்கள் விரும்பியபடியே அனைத்தும் நல்லபடியாக நடக்க உங்களை கைபிடித்து அழைத்துச் செல்லும்.