book

குறள் களஞ்சியம்

Kural kalanjiyam

₹650
எழுத்தாளர் :கவிஞர் பத்மதேவன்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :பொது
பக்கங்கள் :1032
பதிப்பு :1
Published on :2010
குறிச்சொற்கள் :Thirukkural, திருக்குறள், தமிழ்காப்பியம்
Out of Stock
Add to Alert List

வாழ்வை சகல கோணங்களிலும் பார்க்கிறது திருக்குறள்.

ஒட்டுமொத்த உலக வாழ்க்கையையும் முழுப்பரிமாணத்தில் படம்பிடித்து முப்பரிமாணக் காட்சிகளாக நம்முன் விரிய வைத்திருக்கிறது வள்ளுவனின் எழுதுகோல்.

வள்ளுவத்தை ஒருவன் தெள்ளத் தெளிவாக உணர்ந்து கொண்டாலே போதும் -

வாழ்க்கை அவனுக்கு வசப்பட்டுவிடும்.

இந்த உலகப் பொதுமறையைக் கைவிளக்காக வைத்திருப்பவன் வாழ்வின் இண்டு இடுக்குகளிலும் இடர்ப்பாடு இன்றி இயங்க முடியும்.  வாழ்வின் நெரும்பரப்பு எங்கிலும் நிதானம் தவறாமல் நடைபோட இயலும்.

இத்தகைய திருக்குறள் நூலை 'அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டிக் குறுகத் தரித்த குறள்' என்று ஔவை பாராட்டுகிறாள்.

அணுவுக்குள் ஏழு கடலை அடைத்தான் வள்ளுவன்.

அந்த அணுவைத் திறந்து ஏழு கடலை வெளிப்படுத்தும் முயற்சியை, அந்நாள் தொட்டு அறிஞர்கள் பலர் செய்து கொண்டேயிருக்கிறார்கள்.

அந்த முயற்சியில் ஈடுபட்ட அறிஞர்கள் பத்துப் பேரின் பத்து நூல்கள் இத்தொகுப்பில் இடம் பெற்றிருக்கின்றன.  

எல்லாக் கோணங்களிலும் வாழ்வைப் பார்க்கின்ற தமிழ்வேத்த்தை, எல்லாக் கோணங்களிலும் ஒருசேரப் பார்ப்பதற்கான வாய்ப்பைத் தமிழன்பர்களுக்கு ஏற்படுத்தித் தரவதேண்டும் என்பதுதான் இந்தத் தொகுப்பின் நோக்கம்.