book

சிறுவர் நல்லறிவுக் கதைகள்

Siruvar Nallarivu kadhaigal

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கதிரேசன்
பதிப்பகம் :இராமு நிலையம்
Publisher :Devi Veliyeedu
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :160
பதிப்பு :1
Published on :2012
Add to Cart

சிறுவர் நல்லறிவுக் கதைகள் - தானப் பரிசோதனை: முன்னொரு காலத்தில் விசுவாமித்திரர், வசிட்டர், கௌதமர். கசியபர், அத்திரி, பரத்துவாசர் ஆகிய முனிவர்களும், பதிவிரதையாகிய அருந்ததியும், பிரம்ம லோகத்தை அடையவேண்டும் என்னும் நோக்கத்தோடு. வேள்வி செய்து வந்தனர். பசுசகன் என்பவனும், கண்டை என்பவளும் கணவன் மனைவியர். அவர்கள் இருவரும்,அம்முனிவர்களுக்கு வேலைக்காரார்களாக இருந்து, பணிவிடைகள் செய்து வந்தனர். அப்போது நாட்டில் மழை பெய்யாததால் எங்கும் விளைச்சல் இல்லை. அதனால் பஞ்சம் உண்டாயிற்று. நாட்டில் பஞ்சமும், வறட்சியும் கடுமையாக இருந்தன. கடும் பஞ்சத்தால். வேள்வி புரிந்து கொண்டிருந்த முனிவர்கள் பெருந்துன்பத்துக்கு ஆளாக நேரிட்டது. ஆனாலும் அம்முனிவர்கள், துன்பங்களைப் பொறுத்துக் கொண்டே வேள்வி புரிந்தனர்.