book

மகாகவியும் மக்கள்கவியும்

Mahakaviyum Makkalkaviyum

₹45+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நா. முத்துலக்கையன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :122
பதிப்பு :2
Published on :2005
ISBN :9788123409399
குறிச்சொற்கள் :திறனாய்வு, தொல்லியல், நாட்டுப் புறவியல், பயண இலக்கியம், வாழ்க்கை வரலாறு இலக்கியம்
Add to Cart

''இருப்பவன், இல்லாதவன் என்ற எற்றத் தாழ்வு நீங்கி எல்லாருக்கும் எல்லாப் பெருஞ் செல்வமும் கிட்டவேண்டும்'' என்ற சமதர்மக் கோட்பாட்டில் இரு கவிஞர்களும் அழுத்தமாகக் காலூன்றி நின்றனர். இக்கவிஞர்கள் ஒவ்வொருவரும் மக்களுக்கு அத்தியாவசியத் தேவைகளைப் பெற்றுத் தருவதில் போட்டி போட்டனார். பாரதியின் வாழ்க்கையில் கவிதையும் நாட்டுப்பணியும் ஒன்றியதுபோல் மயாகோவ்ஸ்கி வாழ்க்கையில் கவிதையும் புரட்சியும் ஒன்றியது. நாட்டு மக்களின் கூர்மையில்லாத, அறியாமை நிலை கண்டு கவிஞர்கள் இருவரும் வருந்தினார்கள். கண் போன்ற தாய்நாட்டைக் காப்பது உயிரான கடமை என இருவருமே கருதினார்கள். பாதிக்குக் கோயில் யானையினால் மரணம் நேர்ந்தது. மயாகோவ்ஸ்கி கைத்துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு மரணத்தைத் தேடிக்கொண்டார். இரு கவிஞர்களும் மரணத்தைத் தழுவினார்களே தவிர இன்றும் புதிய சமுதாயம் படைக்கும் போர்க் கருவிகளாகத்தான் திகழ்கிறார்கள்.