book

கொள்ளைக்காரர்கள்

Kollaikaarargal

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பொன்னீலன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :178
பதிப்பு :6
Published on :2011
ISBN :9788123406824
குறிச்சொற்கள் :சிந்தனைக்கதைகள், பழங்கதைகள், புராணக் கதைகள், வரலாற்றுக் கதைகள்
Out of Stock
Add to Alert List

கொள்ளைக்காரர்கள்; மக்கள் தேவைக்குப் பற்றாக் குறைவான நெல் விளைச்சலே காணும் மேற்குக் கன்னியாகுமரி மாவட்டத்தின் மக்களைப் பற்றி கதை இது.

 அங்குள்ள ஏழை மக்கள் அரிசியைப் பொன்போலப் போற்றிப் பயன்படுத்துவார்கள். கொஞ்சம் அரிசியைப் போட்டுக் கஞ்சி காய்ச்சி அதைக் கிழங்கோடு சேர்த்துச் சாப்பிடுவார்கள். விழா நாட்களில் மூன்று வேளையும் அரிசிக் சோறு பொங்கி மனநிறைவோடு உண்பார்கள்.

 தட்டுப்பாடு ஏற்படும் மாதங்களில் தஞ்சை, நெல்லை மாவட்டங்களில் விளையும் அரிசியை வியாபாரிகள் கொண்டு வந்து மேற்குக் கன்னியாகுமரியிலும் கேரளத்திலும் குவிப்பார்கள். லைசென்ஸ் வாங்கித்தான் அரிசி கொண்டு வர வேண்டும் என்ற கட்டுப்பாடு வந்த பின்னரும் வியாபாரிகள் லஞ்சம் கொடுத்து அரிசியைக் கடத்திச் சென்று கேரளத்திலும் மேற்குக் கன்னியாகுமரி மாவட்டத்திலும் விற்றுக் கொள்ளையடிப்பது வழக்கம்.