book

ஷேக்ஸ்பியரின் சிந்தனை முத்துக்கள்

Shekspearin Sinthanai Muthukkal

₹45+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கமலா கந்தசாமி
பதிப்பகம் :அறிவுப் பதிப்பகம்
Publisher :Arivu pathippagam
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2008
ISBN :9188188048746
குறிச்சொற்கள் :முயற்சி, திட்டம், உழைப்பு
Out of Stock
Add to Alert List

சிப்பியில் விழுந்த பனித்துளி முத்தாக உருமாறுவதுடன் விலை மதிக்கமுடியாத அளவுக்கு நிலை உயர்ந்து விடுகிறது. அதைப்போல் உள்ளம் என்னும் சிப்பிக்குள் உயர்ந்தோர் கருத்துக்களை - விளையாவிட்டால் நல்ல சிந்தனைகளைச் சொத்தாக அடையலாம். நல்ல சிந்தனைகள் மூலம் நல்ல செய்ல்கள் நடைமுறைப்படுத்தப்படும்போது நல்ல வாழ்க்கை அமைகிறது, நல்ல சமுதாயம் உருவாகிறது. நல்ல சமுதாயத்தை உருவாக்குவதே படைப்பாளர்களின் சிந்தனை.

ஷேக்ஸ்பியரின் சிந்தனைகளை எழுத்தாளர் கமலா கந்தசாமி முத்துக்களாகக் கோத்துத் தந்துள்ளார். நாடக்க் கொட்டகையில் குதிரை வண்டிக் காவலனாக வேலை பார்த்த ஷேக்ஸ்பியருக்கு எதிர்பாராமல் வந்த வாய்ப்பு ஒன்று அவரது வாழ்க்கைக்குத் திருப்புமுனையாக அமைந்தன. குதிரை வண்டிக் காவலனாக இருந்த ஷேக்ஸ்பியரின் உள்ளத்தில் தினந்தோறும் அரங்கில் ஒலிக்கும் நாடக வசனங்கள் பதிந்தன. எல்லாக் கதாபாத்திரங்களின் உரையாடல்களும் அவரது உள்ளத்தில் உறைந்தன. ஒருநாள் முக்கிய வேடத்தில் நடிக்கும் நடிகர் அடிபட்டு நடிக்க முடியாமல் போனதால் ஷேக்ஸ்பியர் அந்த நாடகத்தில் நடிப்பதாகச் சொல்லி அன்று முதல் நடிகராக மாறிவிட்டார். அதன்பின் நாடக ஆசிரியராக்ப் பரிணமித்தார்.