book

மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் நீத்தல் விண்ணப்பம், திருவெம்பாவை மூலமும் உரையும்

Manikavasagar Aruliya Thiruvasagam Neethal Vinnappam ,Thiruvenbavai Moolamum Uraiyum

₹35+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :புலியூர்க் கேசிகன்
பதிப்பகம் :சாரதா பதிப்பகம்
Publisher :Saratha Pathippagam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :51
பதிப்பு :3
Published on :2017
Out of Stock
Add to Alert List

கடையவ னேனைக் கருணையி னாற்கலந் தாண்டுகொண்ட      விடையவ னேவிட் டிடுதிகண் டாய்விறல் வேங்கையின்தோல்      உடையவ னே மன்னும் உத்தரகோசமங்கைக்கரசே      சடையவ னேதளர்ந் தேன்எம் பிரான்என்னைத் தாங்கிக்கொள்ளே.      கொள்ளேர் பிளவக லாத்தடங் கொங்கையர் கொவ்வைச் செவ்வாய்      விள்ளேன் எனினும் விடுதிகண் டாய்நின் விழுத்தொழும்பின்      உள்ளேன் புறமல்லேன் உத்தர கோசமங் கைக்கரசே      கள்ளேன் ஒழியவும் கண்டுகொண் டாண்டதெக் காரணமே.      காருறு கண்ணியர் ஐம்புலன் ஆற்றங் கரைமரமாய்      வேருறு வேனை விடுதிகண்டாய் விளங்குந்திருவார்      ஊருறை வாய்மன்னும் உத்தரகோசமங்கைக் கரசே      வாருறு பூண்முலை யாள்பங்க என்னை வளர்ப்பவனே.      வளர்கின்ற நின்கருணைக்கையில் வாங்கவும் நீங்கியிப்பால்      மிளிர்கின்ற என்னை விடுதிகண்டாய் வெண்மதிக்கொழுந்தொன்று      ஒளிர்கின்ற நீள்முடி உத்தரகோசமங்கைக்கரசே      தெளிகின்ற பொன்னுமின் னும் அன்னதோற்றச் செழுஞ்சுடரே