book

நாமக்கல் கவிஞர் பாடல்கள்

Namakkal Kavignar Paadalgal

₹220+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை
பதிப்பகம் :சீதை பதிப்பகம்
Publisher :Seethai Pathippagam
புத்தக வகை :தமிழ்மொழி
பக்கங்கள் :487
பதிப்பு :4
Published on :2012
Out of Stock
Add to Alert List

பாட்டாளி மக்களது பசிதீர வேண்டும் ;
    பணமென்ற மோகத்தின் விசைதீர வேண்டும் ;
    கூட்டாளி வர்க்கங்கள் குணம்மாற வேண்டும் ;
    குற்றேவல் தொழிலென்ற மனம்மாற வேண்டும் ;
    வீட்டொடு தான்மட்டும் சுகமாக உண்டும்
    வேறுள்ளோர் துன்பங்கள் கண்ணாரக் கண்டும்
    நாட்டோடு சேராத தனிபோக உரிமை
    நடவாதிங் கினியென்று நாமறிதல் பெருமை.
    உடலத்தின் வடிவத்தில் பேதங்கள் உண்டு ;
    உள்ளத்தின் எண்ணத்தில் வித்யாசம் உண்டு ;
    சடலத்தை ஆள்கின்ற பசிதாகம் எல்லாம்
    சகலர்க்கும் உலகத்தில் சமமான தன்றோ!
    கடலொத்த தொழிலாளர் வெகுபாடு பட்டும்
    கஞ்சிக்கு வழியின்றிக் கண்ணீரைக் கொட்டும்
    மடமிக்க நிலைமைக்கு மாற்றில்லை யானால்
    மனிதர்க்கிங் கறிவுள்ள ஏற்றங்கள் ஏனோ?