book

புண்ணியம் நல்கும் புனிதத் தலங்கள்

Punniyam Nalgum Punitha Thalangal

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :காஷ்யபன்
பதிப்பகம் :விகடன் பிரசுரம்
Publisher :Vikatan Prasuram
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :112
பதிப்பு :2
Published on :2008
ISBN :9788189936181
Out of Stock
Add to Alert List

பிரபஞ்சமாக எங்கும் வியாபித்திருக்கும் இறைபொருளை தன் அருகே வைத்துப் பார்க்க மனிதன் ஆசை கொள்ளும்போதெல்லாம் ஆலயங்கள் எழுகின்றன. உயிர்களைக் காக்கும் பரம்பொருள் அன்புக்குக் கட்டுப்பட்டவன். ஆதலால்தான், அடியவர்களின் அன்புக்கு இணங்கி, ஆலயங்களில் வீற்றிருந்து புண்ணியம் பெற அழைக்கின்றான். ஆலயங்கள் வழிபாட்டுத் தலங்களாக இருப்பதோடு மட்டுமல்லாமல், நமது முன்னோர்களின் வாழ்க்கை முறைகளை உலகுக்கு உயர்த்திப் பிடிக்கும் பண்பாட்டுத் தளங்களாகவும் திகழ்கின்றன. மேலும், சுற்றுலாத் தலங்களாகவும் இருந்து நாட்டுக்கு வருமானத்தை ஈட்டிக் கொடுக்கின்றன. நம் புண்ணிய பாரதத்தில் இப்படிப்பட்ட ஆலயங்கள் ஏராளம் உள்ளன. ஆண்டவனின் அவதார தலங்கள் முதல், அரசர்களால் கட்டுவிக்கப்பட்டு ஆண்டவனின் அருள் பெற்ற ஆலயங்கள் வரை இவற்றில் அடங்கும். இந்த ஆலயங்களுக்கு எல்லாம் புண்ணிய யாத்திரையாகச் சென்று, தாம் பெற்ற இறை அனுபவத்தை சக்தி விகடன் இதழில் பகிர்ந்து கொண்டார் எழுத்தாளர் காஷ்யபன். அந்த அனுபவத்தின் வெளிப்பாடுதான் புண்ணியம் நல்கும் புனிதத் தலங்கள். ஆலயங்களின் வரலாற்றுப் பின்னணி, அங்கு நிகழும் சிறப்பு வழிபாடுகள், கோலாகலமாக நிகழ்ந்தே