book

சுற்றுச்சூழல் கல்வி

₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :த. சம்பத் குமார்
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :கல்வி
பக்கங்கள் :326
பதிப்பு :1
Published on :2009
ISBN :9798177358703
Add to Cart

காற்று, நிலம், மண், நீர், மரம் தாவரங்கள், உயிரினங்கள் போன்ற உயிருள்ள, உயிரற்ற பொருட்களைப் பற்றி எடுத்துக் கூறுவது சுற்றுச்சூழல் எனப்படும்.

“நாம் நிலத்தை, நம்முடைய பயன்படு பொருளாக நினைத்து தவறாகப் பயன்படுத்தி வருகின்றோம். நிலத்தை நம் சமூகமாகவும், நாம் ஜிவிக்கும் உடல், உயிர் போன்ற பொருளாகவும், கருதினால், அதன் மீது அன்பும், மரியாதையும் செலுத்தத் தொடங்குவோம்’ என்று அல்டோலியோ “பருப்பொருளை அல்லது புலன்களால் உணரப்படும் பொருளை உடனடியாகச் சுற்றியுள்ளவை மற்றும் அதன் மீது நேரடியான விளைவை ஏற்படுத்தும் எதுவும்” சுற்றுச் சூழல் எனப்படும் என்று- பி.கிஸ்பெர்ட் (P.Gisbert) விவரித்துள்ளார்.

சுற்றுச் சூழல் கோட்பாடு, விலங்குகள், செடி, கொடிகள், மரங்கள், மலைகள், நிலங்கள், நினைவுச் சின்னங்கள் போன்றவற்றைப் பாதுகாப்பதையும், அவற்றைச் சீர்கேடு செய்யும் காரணிகளையும், அவற்றிலிருந்து பாதுகாப்பதையையும், உள்ளடக்கியதாகும்.