book

கடிதத்தால் வந்த சண்டை

Kadithathaal Vantha Sandai

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எம்.ஏ. பழனியப்பன்
பதிப்பகம் :தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்
Publisher :Tamarai publications (p) ltd
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :94
பதிப்பு :1
Published on :2009
Add to Cart

சாலைப் போக்குவரத்தில், எதிரெதிரே நின்று கொண்டு, 'யாருக்கு யார் வழிவிடுவது?' என்று சண்டை போட்டுக் கொண்டிருப்பர்.  பலர் வந்து சமாதானம் செய்து இருவரும் விலகிச் செல்வர்.  இடையே அரைமணிநேரம் கரைந்திருக்கும். இருவருக்குமே அந்த அரைமணிநேரம் வீண்!  ஆனால் இருவருள் ஒருவர் விட்டுக்கொடுத்திருந்தால், ஓரிரு நிமிட நேரத்தாமத்துடன் போயிருக்கும்.  அத்துடன் மனத்தின் அமைதியும் குலைந்திருக்காது.

சரி, இத்தகைய நிகழ்வுகளுக்கு எல்லாம் காரணம் என்ன?  பதற்றம், பரபரப்பு!  ஒரே ஒரு வினாடி நம் மனம் சிந்தித்தால், இவற்றைப் போன்றவற்றைத் தவிர்த்துவிட முடியும். அதற்குத் தேவை அமைதியும், நிதானமுமே!

இத்தகு அமைதியையும், நிதானத்தையும் நம் மனத்தில் பதியச் செய்யும் கதைகள் தடம், இந்நூலிலுள்ள கதைகள்.  எம்.ஏ.பழனியப்பன் யாத்துள்ள பண்பை வளர்க்கும் இந்நூல் எல்லோருக்கும் படிக்க ஏற்றது!

- பதிப்பகத்தார்.