"இலங்கை முள்ளிவாய்க்காலில் 2009 மே–18ந் தேதிக்கு பிறகு நடந்த பேரழிவினால் பாதிக்கப்பட்ட தமிழ் நெஞ்சங்கள் குறித்து எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பே “முள்ளிவாய்க்காலில் தொடங்கும் விடுதலை அரசியல்.’’ இதனை செய்திதுறையில் இணை இயக்குனராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற பா.செயப்பிரகாசம் எழுதி தொகுத்துள்ளார். 15 தலைப்புகளில் முள்ளிவாய்க்கால் கொடுமைகளை எழுதியிருப்பதை படிக்கும்பேதே நம்முடைய நெஞ்சம் பதறுகிறது.
இனப்படுகொலையும் இந்தியாவும், உலக தமிழர்களை காப்பது யார், இப்போதாவது பேசுங்கள் ஆகிய தலைப்புகளில் வெளியான கட்டுரைகள் புத்தகத்திற்கு மேலும் பெருமை சேர்க்கிறது. அனைவரும் படித்து தெரிந்து கொள்ள வேண்டிய நூலாகும்.
"