book

மாண்புமிகு மகான்கள் பகவான் ரமண மகரிஷி

₹140+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ப்ரியா கல்யாணராமன்
பதிப்பகம் :குமுதம் புத்தகம் வெளியீடு
Publisher :kumudam puthagam velieedu
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :176
பதிப்பு :1
Published on :2012
Add to Cart

றைத்தேடல் என்பது எல்லை இல்லாத பயணம். இதில் வெற்றி பெற்றவர்கள் தன்னை உணர்ந்த மனிதர்களாகிறார்கள். நல்ல மனிதர்களால் மட்டுமே உலகத்தை உணர்ந்து கொள்ள முடியும். உலகத்தை உணர்ந்தவனே சிறந்த  ஞானியாகிறான் என்பது மகான்களின் வாக்கு.
இப்படி இந்தக் கலியுகத்தில் தன்னையும் உணர்ந்து, தன்னை உலகத்துக்கும் உணர்த்திய மகான்களில் ஒருவர் பகவான் ஸ்ரீரமண மகரிஷி. மகான் மனிதப்பிறவி எடுத்தாலும் கர்மவினையை அனுபவித்தே தீரவேண்டும் என்ற மெய்ப்பொருளை இந்த மனித உலகத்திற்கு உணர்த்தியவர்.
நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை திருத்தலத்தில், நிறைந்தெழும் கருணா மூர்த்தியாக இருந்து நமக்கு வழிகாட்டிய மகான் ரமணர் அவதரித்த புண்ணிய திருத்தலம் விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையிலிருந்து 14 கி.மீ. தூரத்தில் உள்ள திருச்சுழி என்ற தலமாகும்.