தொன்மவியல் , இனவரைவியல், மானிடவியல் ,தொல் பொருளியல் ஆகியவற்றில் ஒருவர் எந்த அளவு புலமையாளரோ அந்த அளவு அவர் வரலாற்றில் பயணித்தல் சாத்தியமானது.கோசாம்பி இந்த எல்லைகளையெல்லாம் பொருள் முதல்வாத வழிமுறையால் அதிரடியாக உடைத்தெறிந்ததார்.உற்பத்தி முறையை அடியொற்றி இந்திய வரலாற்றை எவ்வாறு ஆய்ந்துரைத்தார் என்றும் பகவத் கீதையைப் பற்றிய கோசாம்பியின் ஆய்வு நூலைப் பற்றியும் தெளிவிக்கிறது இந்நூல்.