book

துணங்கைக் கூத்து

₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஶ்ரீபதி
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :142
பதிப்பு :1
Published on :2012
ISBN :9788123420899
Add to Cart

மேற்கண்ட பதினொரு வகையான ஆடல்கள் மட்டுமில்லாமல் வள்ளிக்கூத்து, துணங்கைக் கூத்து, குரவைக்கூத்து, வெறியாடல் போன்றக் கூத்துக்களும் அக்காலத்தில் சிறந்து விளங்கின.
வள்ளிக்கூத்து : வள்ளிக்கூத்து எனப்படுவது நடைமுறையில் உள்ள ‘வள்ளி’யின் கதையைப் பின்பற்றி அமைவதாகும். காலங்காலமாகத் தொடர்ந்து வரும் இக்கூத்து அதன் கதைத் தன்மையால் வாடாமல் (அழியாமல்) நின்று செழித்துள்ளது என்பதை “வாடா வள்ளியின் வளம் பல தரூஉம்” (பெரும் : 370) என்ற பெரும்பாணாற்றுப்படைப் பாடல் அடி விளக்குகிறது.
துணங்கைக் கூத்து : துணங்கைக் கூத்து எனும் கூத்தானது மகளிர் கை கோத்துக் கொண்டு நடத்திக்காட்டிய கலையாகச் சங்க காலத்தில் விளங்கியது. இளம் பெண்கள் இறைவழிபாட்டின்போது இவ்வகை நிகழ்வுகளை நடத்திக்காட்டியிருக்க வேண்டுமெனக் கருதலாம். “எல்வளை மகளிர் துணங்கை” (குறுந் : 364 : 5-6) எனும் குறுந்தொகைப் பாடல் அடியும் துணங்கைக் கூத்து குறித்துப் பொதுவாகப் பேசுகிறது.