book

கொ.மா.கோதண்டம் சிறுகதைகள் தொகுப்பு-2

Ko.Ma.Kothandam Sirukathaigal Thoguppu-2

₹69+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கொ.மா. கோதண்டம்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :274
பதிப்பு :1
Published on :2002
ISBN :8123407699
குறிச்சொற்கள் :கற்பனை, சிந்தனை, கனவு, நாவல், கவிஞர்
Add to Cart

ராஜபாளையம்  தமிழ் இலக்கியத்துக்குத் தந்த படைப்பாளிகளில் முதன்மையான ஒருவர்   கொ.மா.கோதண்டம். சிறுகதை எழுத்தாளர் . நாவலாசிரியர், கவிஞர், குழந்தை  எழுத்தாளர் எனப் பல துறைகளிலும் முத்திரை பதித்துள்ள இவர், ஒரு நல்ல அமைப்பாளரும்கூட.  மணிமேகலை மன்றம், காந்தி கலா மன்றம் போன்ற அமைப்புகளில் முக்கியமான பொறுப்புகள்
வகித்துச் செயல்படுகின்றவர். தமிழ்நாடு கலை  இலக்கியப் பெருமன்றம் விருதுநகர் மாவட்ட  அமைப்பின் தலைவர்.60 வயது நிரம்பிய பொறுப்புணர்வு மிக்க சுறுசுறுப்பான இளைஞர். மத்திய- மாநில அரசுகள், மற்றும் இலக்கிய அமைப்புகளின் பரிசுகள் பல பெற்றவர். குறிஞ்சிச் செல்வர் என்று பாராட்டப்படுபவர். இவர் நூல்கள் பல பல்கலைக்கழகங்களில் பாடமாக உள்ளன. சில மருத்துவ நூல்களும் எழுதியுள்ளார்.

பசியிலும்,துன்பத்திலும் அடிமைத்தனத்திலும், ஒடுக்கு முறையிலுமிருந்து விடுபட்டு,சகல மக்களும் மனித வாழ்வு வாழவேண்டும் என்ற உன்னத லட்சியம் உடையவர். அந்த லட்சியத்துடனே பேனாவைக் கையில் எடுத்தவர். இன்றுவரை அதைக் கீழே வைக்காதவர்.யதார்த்தவாதி.
 
                                                                                                                                               -பொன்னீலன்