-
"அமரர் கல்கியின் இயற்பெயர் ரா. கிருஷ்ணமூர்த்தி. 1899ல் தஞ்சை மாவட்டம், புத்தமங்கலத்தில் பிறந்தார். ‘நவசக்தி’ பத்திரிகையில் துணை ஆசிரியராகத் தமது பத்திரிகை உலக வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர், எஸ். எஸ். வாசன் அழைப்பின் பேரில் ‘ஆனந்த விகடன்’ பொறுப்பாசிரியரானார். பிறகு சொந்தமாக அவரே ‘கல்கி’ வார இதழைத் தொடங்கி, அதன் ஆசிரியராகவும் இருந்தார். தமிழில் சரித்திரக் கதைகளின் முன்னோடி. இவரது ‘சிவகாமியின் சபதம்’, ‘பொன்னியின் செல்வன்’, ‘பார்த்திபன் கனவு’ போன்ற சரித்திரக் கதைகள் அக்காலத்தில் வாசகர்களின் மனத்தில் இதிகாசம் போலவே இடம் பெற்றன. இன்றளவும் வாசகர்களால் பெரிதும் விரும்பப்படும் ‘பொன்னியின் செல்வன்’ 1950 - 1955 ஆண்டு வரை கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளியாகி, மிகுந்த வரவேற்பைப் பெற்றது. பிரசித்தி பெற்ற இந்த வரலாற்றுப் புதினம் கி.பி. 1000ம் ஆண்டு காலக் கட்டத்தில் அரசோச்சிய சோழப் பேரரசை அடிப்படையாகக்கொண்டு எழுதப்பட்டது. 1954, டிசம்பர் 5ம் தேதி, தமது 55வது வயதில் கல்கி காலமானார். கல்கியின் எழுத்துகள் 1999ம் ஆண்டு தமிழக அரசால் நாட்டுடைமை ஆக்கப்பட்டன."
-
This book Ponniyen Selvan Aindhu Paagangalum Serthu is written by Kalki and published by Vikatan Prasuram.
இந்த நூல் பொன்னியின் செல்வன் ஐந்து பாகங்களும் சேர்த்து, கல்கி அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Ponniyen Selvan Aindhu Paagangalum Serthu, பொன்னியின் செல்வன் ஐந்து பாகங்களும் சேர்த்து, கல்கி, Kalki, Varalatru Novel, வரலாற்று நாவல் , Kalki Varalatru Novel,கல்கி வரலாற்று நாவல்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Kalki books, buy Vikatan Prasuram books online, buy Ponniyen Selvan Aindhu Paagangalum Serthu tamil book.
|
மணியனின் படங்கள் ஒவ்வொரு அத்தியாயத்திலும் இடம் பெற்றுள்ளதா?
அட்டைப் படம் மாற்றப்பட வேண்டும். பாகம் 5 என்று மட்டும் இருப்பதால் குழப்பம் ஏற்படுத்துகிறது.
ஆம். எனக்கும் இதே சந்தேகம் உள்ளது.
இந்த புத்தகத்தை நான் 2017-08-07 அன்று வாங்கி இருந்தேன். பத்து நாட்கள் கூட ஆகவில்லை அதற்குள் பைண்டிங் பிரிந்து விட்டது . பக்கங்கள் தனித்தனியாக வரத்தொடங்கிவிட்டன. இதனால் என் தாயார் ஜீவா புத்தகளயத்தை தொடர்பு செய்ய பல முறை முயற்சித்தும் எந்த பதிலும் இல்லை. தொலைபேசியை அவர்கள் சீண்டுவதாக தெரியவில்லை. சேவை மிகவும் மோசம். இப்பொழுது என்ன செய்வது என்று தெரியவில்லை.