1954ல் தமிழ் வளர்ச்சிக் கழகப் பரிசு பெற்ற இந்நாவலின் 16ம் பதிப்பு இது.நாட்டு விடுதலைப் போரில் ஆயுதம் தாங்கிய இரண்டாவது போர்முனையான நேத்தாஜியின் இந்திய தேசிய ராணுவத்தின் நிகழ்வுகளைப் பின்புலமாகக் கொண்ட நாவல்.தன் ஏழ்மையால் கனகத்தைக் கைபிடிக்க இயலாது,வாசு ராணுவத்தில் சேர்ந்து, பின் பர்மாவில் இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றுகிறான்.அந்நியர்களின் பிடியில் இந்தியர்படும் வேதனையும் நேதாஜியின் தலைமையகம் ஒன்றுதிரண்டு நாட்டுரிமைக்காகப் போராடுகையில் அங்கு புஷ்பாவின் காதல் போராட்டம் சிக்குண்டு மீள்வதும் தத்ரூபமாகப் படம்பிடிக்கப் பெற்றுள்ளது.